மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
நயன்தாரா நடித்த மாயா படத்தை தொடர்ந்து பொட்டன்சியல் ஸ்டூடியோ தயாரிக்கும் படம் 'மாநகரம்'. குறும்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் ஹைபர்லிங் டைப்பிலான திரைக்கதையில் தயாராகிறது. அதாவது ஒரே படத்தில் நான்கு கதைகள் இருக்கும், அந்த கதைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கும். ஆனால் கேரக்டர்கள் சந்தித்து கொள்ள மாட்டார்கள், அந்த நான்கு பேராக வழக்கு எண் ஸ்ரீ, சந்தீப் கிஷன், சார்லி, முனீஷ்காந்த் நடிக்கிறார்கள். ரெஜினா ஹீரோயின், இவர் மட்டும் நான்கு கதைக்குள்ளும் வந்து செல்வாராம்.
பல்வேறு கனவுகளுடன் சென்னைக்கு வரும் இந்த நான்கு பேரையும் சென்னை எப்படி வரவேற்கிறது. வாழ வைக்கிறதா, வீழ்த்துகிறதா என்பதுதான் கதை. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார், ஜாவித் இசை அமைக்கிறார். இதன் தொடக்கவிழா நேற்று நடந்தது. இயக்குனர்கள் பேரரசு, சமுத்திரகனி, கார்த்திக் சுப்புராஜ், சித்ரா லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.