ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நயன்தாரா நடித்த மாயா படத்தை தொடர்ந்து பொட்டன்சியல் ஸ்டூடியோ தயாரிக்கும் படம் 'மாநகரம்'. குறும்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் ஹைபர்லிங் டைப்பிலான திரைக்கதையில் தயாராகிறது. அதாவது ஒரே படத்தில் நான்கு கதைகள் இருக்கும், அந்த கதைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கும். ஆனால் கேரக்டர்கள் சந்தித்து கொள்ள மாட்டார்கள், அந்த நான்கு பேராக வழக்கு எண் ஸ்ரீ, சந்தீப் கிஷன், சார்லி, முனீஷ்காந்த் நடிக்கிறார்கள். ரெஜினா ஹீரோயின், இவர் மட்டும் நான்கு கதைக்குள்ளும் வந்து செல்வாராம்.
பல்வேறு கனவுகளுடன் சென்னைக்கு வரும் இந்த நான்கு பேரையும் சென்னை எப்படி வரவேற்கிறது. வாழ வைக்கிறதா, வீழ்த்துகிறதா என்பதுதான் கதை. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார், ஜாவித் இசை அமைக்கிறார். இதன் தொடக்கவிழா நேற்று நடந்தது. இயக்குனர்கள் பேரரசு, சமுத்திரகனி, கார்த்திக் சுப்புராஜ், சித்ரா லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.