விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
கேப்டன் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் பிரியங்கா. இந்நிலையில், ராஜ் டிவியில் ஒளிபரப்பான என் இனிய தோழியே, சபீதா என்கிற சபாபதி ஆகிய தொடர்களில் நடித்து வரும் அவர் தற்போது ரம்யா கிருஷ்ணனின் வம்சம் சீரியலில் என்ட்ரியாகி நடித்து வருகிறார்.
இதுகுறித்து பிரியங்கா கூறுகையில், கேப்டன் தொலைக்காட்சியில் நான் தொகுப்பாளினியாக இருந்தபோது சில சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு பொருத்தமான, பிடித்தமான கேரக்டர்களாக இருந்ததால் சீரியல் நடிகை யாக மாறினேன். அப்படி நான் முதன்முதலில் நடித்த என் இனிய தோழியே சீரியலில் நான் நடித்த கேரக்டரும், நடிப்பும் நன்றாக ரீச் ஆனது.
அதனால் அதைப்பார்த்து விட்டு சபீதா என்கிற சபாபதி சீரியல் வாய்ப்பு வந்தது. அதையடுத்து இப்போது ரம்யா கிருஷ்ணனின் வம்சம் சீரியலில் நடிக்கிறேன். இந்த தொடரில் ஹீரோயினி பூமிகாவின் சகோதரியாக நடிக்கிறேன். நான் நடிக் கும் ஜோதிகா என்கிற வேடம் பாசிட்டீவானது. நல்லது மட்டுமே செய்யக்கூடிய வேடத்தில் நடிக்கிறேன். இதனால் சமீபத்தில்தான் எனது கேரக்டர் என்ட்ரியானபோதும் நேயர்கள் மனதில் இடம் பிடித்து விட்டேன். அந்த அளவுக்கு டச்சிங்கான வேடம். அதோடு எனக்குப் பிடித்தமான ரம்யாகிருஷ்ணன் மேடத்தின் சீரியலில் நடிக்கக் கிடைத்த இந்த வாய்ப்பை ரொம்ப பெருமையாக கருதுகிறேன் என்கிறார் பிரியங்கா.