கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
கமல்ஹாசனுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த படம் 'நாயகன்'. அதில் அவர் மும்பை தாதா வேலு நாயக்கராக நடித்திருந்தார். அவரை அழிக்க முயலும் டெரர் போலீஸ் அதிகாரியாக நடித்தவர் பிரதீப் சக்தி.
60 வயதான பிரதீப் சக்தி சினிமாவைவிட்டு விலகி அமெரிக்காவின் நியூயார்க்கில் ஓட்டல் நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
ஆந்திராவைச் சேர்ந்த பிரதீப் ரெட்டி நாயகன் படத்திற்கு பிறகு குணா படத்திலும் நடித்தார். ஏராளமான தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களிலும் நடித்தார். பின்னர் தான் அமெரிக்காவில் செட்டிலானர். இன்று அவரது இறுதி சடங்குள் அங்கேயே நடக்கிறது.