அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
பீப் பாடல் சர்ச்சை தொடர்பாக பல முறை போலீஸில் ஆஜராகமால் இருந்த வந்த சிம்பு, இப்போது நேரில் ஆஜராகி விளக்கம் அளித்ததோடு, தன் மேல் எந்த தவறும் இல்லை என்று கூறினார்.
பீப் சாங் என்ற பெயரில் ஆபாசப்பாடலை உருவாக்கியதற்காக நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது தமிழகம் முழுக்க பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இன்னொரு பக்கம் காவல்நிலையங்களில் புகார்களும் கொடுக்கப்பட்டுள்ளன. பீப் சாங் விவகாரத்தில் தேவையில்லாமல் என் பெயரை இழுத்துவிட்டுள்ளனர், எனக்கும் அதற்கு சம்மந்தமில்லை என்று கடந்தமாதம், கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் இரவோடு இரவாக சென்று விளக்கம் அளித்துவிட்டார் அனிருத்.
நடிகர் சிம்புவோ ஆரம்பத்திலிருந்தே இந்த விவகாரத்தில் ஏடாகூடமாகவே செயல்பட்டு வருகிறார். ஆமாம் நான்தான் இந்த பீப் சாங்கை உருவாக்கினேன்... இதுபோல் 150 பாடல்கள் உருவாக்கியுள்ளோம்... என்மேல் தப்பில்லை இதை வாட்ஸ்அப்பில் வெளியிட்டவன் மேல்தான் தப்பு உங்களுக்குப் பிடிக்கலைன்னா கேட்காதீங்க... என்று எடக்கு மடக்காகவே பேசிய சிம்பு இன்னொரு பக்கம் கோர்ட்டில் வழக்குமேல் வழக்கு தொடுத்து போலீசில் ஆஜராவதற்கு அவகாசம் கேட்டு கொண்டே இருந்தார்.
இந்நிலையில் பிப்.15ம் தேதி சிம்பு தொடர்பான விழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிப்.,24ம் தேதி சிம்பு கோவை போலீஸ் முன் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று(பிப்.22) காலை 8.10 மணியளவில், விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை வந்தார் சிம்பு. முன்னதாக சிம்புவின் தந்தையும், இயக்குநருமான டி.ராஜேந்தர் நேற்று இரவே கோவை வந்தார். அவரைத் தொடர்ந்து, நள்ளிரவில் சிம்புவும் கோவை வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று காலை தான் வந்தார்.
கோவை வந்த சிம்பு, சரியாக காலை 9.56 மணியளவில், கோவை, காட்டூர் பகுதி போலீஸ் ஸ்டேஷனில் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்தார். சிம்புவுடன் அவரது தந்தை டி.ராஜேந்தரும் உடன் இருந்தார். சரியாக 10.25 மணிக்கு சிம்பு வெளியே வந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, ''போலீஸ் முன் ஆஜராகி அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறேன். என் மேல் எந்த தவறும் இல்லை, போலீஸ் விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன், அதற்கு மேல் ஆண்டவன் பார்த்து கொள்வார்'' என்றார்.
இதனிடையே கோவை வருவதை அறிந்த அவரது ரசிகர்கள், ஏராளமானபேர் காட்டூர் பகுதி போலீஸ் ஸ்டேஷன் முன்பு கூடிவிட்டனர். சிம்பு காண ரசிகர்கள் முண்டியடித்ததால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. ரசிகர்களை நோக்கி கையசைத்து வேகமாக காரில் ஏறி பறந்தார் சிம்பு.