சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
2015ல் வெளிவந்த படங்களில் அனைவராலும் பாராட்டப்பட்டு, தேசிய விருதும் பெற்று, ரசிகர்களையும் கவர்ந்த படமாக 'காக்கா முட்டை' படம் அமைந்தது. அதில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதற்கு முன் அவர் சில படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும், 'காக்கா முட்டை' படத்திற்குப் பிறகு அவர் மீதான பார்வை இயக்குனர்களுக்கும் மாறியது. தமிழ் பேசத் தெரிந்த திறமையான ஒரு நடிகையை தங்களது படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முடிவெடுத்தார்கள்.
அதில் ஒன்றாக 'ஆறாது சினம்' படம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் அருள்நிதி ஜோடியாக நடித்தாலும் இதிலும் ஒரு குழந்தைக்குத் தாயாக ஐஸ்வர்யா நடித்துள்ளார். இந்தப் படம்தான் ஐஸ்வர்யா நடித்து இந்த ஆண்டில் வெளிவரும் முதல் படம். கடந்த வருடம் போலவே இந்தப் படமும் தனக்கு நல்ல வருடமாக அமையும் என ஐஸ்வர்யா எதிர்பார்த்துக் கொண்டுள்ளார். 'ஆறாது சினம்' படத்திற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மனிதன்' படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். தொடர்ந்து அவர் நடித்துள்ள'இடம் பொருள் ஏவல், குற்றமும் தண்டனையும், ஹலோ நான் பேய் பேசுறேன்' உள்ளிட்ட பல படங்கள் இந்த ஆண்டில் வெளிவர உள்ளன.