சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்து வரும் அச்சம் என்பது மடமையடா படத்தின் இறுதிக்கட்ட படப்படிப்புகள் சென்னையில் நடந்து வருகிறது. இதில் சண்டைக்காட்சியை படமாக்கி வருகிறார்கள். ஸ்டண்ட் சில்வா சண்டை காட்சிகளை அமைத்து வருகிறார். நேற்று முன்தினம் சண்டைக் கலைஞர்கள் பலரோடு சிம்பு சண்டையிடும் காட்சிகள் படமாக்கப்பட்டபோது, ஒரு சண்டை கலைஞர் சிம்புவை முகத்தில் குத்துவது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. அப்போது டைமிங் மிஸ் ஆனதால் சிம்பு முகத்தில் நிஜமாகவே குத்து விழுந்தது.
இதில் முகத்தில் காயம் ஏற்பட்டது. முக்கு பகுதி ஜவ்வு கிழிந்து ரத்தம் கொட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த படப்பிடிப்பு குழுவினர், சிம்புவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிம்புவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறியதைத் தொடர்ந்து சிம்பு வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அச்சம் என்பது மடமைடா படத்தின் படப்பிடிப்புகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.