ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கெளதம்மேனன் இயக்கிய படங்களில் விண்ணைத்தாண்டி வருவாயா முக்கிய மான படம். தமிழில் சிம்பு-திரிஷாவை வைத்து இயக்கிய அவர், பின்னர் இந்தியிலும் இயக்கினார். ஆனால் அந்த படத்தின் வெற்றிக்குப்பிறகு, விஜய், சூர்யாவை வைத்து படங்கள் இயக்குவதாக இருந்தார். அந்த படங்கள் நடைபெறவில்லை. அதனால் கெளதம்மேனனின் மார்க்கெட் தடுமாறத் தொடங்கியது. ஆனால், அஜீத் நடித்த என்னை அறிந்தால் படத்தின் ஹிட்டுக்கு பிறகு மறுபடியும் எழுந்து நிற்கிறார் கெளதம்மேனன்.
இந்நிலையில், மீண்டும் சிம்புவைக்கொண்டு அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து ஜெயம்ரவி நடிக்கும் படத்தை தயாரிக்கும் கெளதம்மேனன், தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறாராம். அது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் என்கிறார்கள். முதல் பாகத்தில் நடித்த சிம்பு, அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பும் தனக்கே கிடைக்கும் என எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், இப்போது அந்த வாய்ப்பு தனுசுக்கு கைமாறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.