ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இசையமைப்பாளர் அனிருத்தை தான் நடித்த 3 படத்தில் அறிமுகம் செய்தவர் தனுஷ். அந்த படத்திற்காக அனிருத் இசையில் தனுஷ் எழுதிய ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகமெங்கிலும் ஹிட்டானது. ஆக, தான் ஒரு சிறந்த இசை யமைப்பாளரைத்தான் அறிமுகம் செய்திருக்கிறோம் என்று பெருமிதம் கொண்ட தனுஷ், அதையடுத்து தான் நடித்த அடுத்தடுத்த படங்களிலும் அனிருத்தை இசையமைக்க வைத்து அவரது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.
மேலும், அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட அனிருத்தும், ஹிட் பாடல்களாக கொடுத்து பின்னர் விஜய், அஜீத் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங் களிலும் இசையமைத்து குறுகிய காலத்தில் முன்னணி இசையமைப்பாளராகி விட்டார்.
இந்த நேரத்தில்தான் ஆபாச பீப் சாங் சர்ச்சையில் சிக்கினார் அனிருத். அதனால் சில முன்னணி ஹீரோக்களின் படங்களில் இருந்து அனிருத் பெயர் நீக்கப் பட்டதோடு, தனுஷ் புதிதாக நடித்த படங்களிலும் அவர் பெயர் இடம்பெறாமல் வேறு இசையமைப்பாளர்கள் இடம்பெற்றனர். இதனால் ஆபாச பாடல் சர்ச்சை காரணமாக அனிருத்துடன் இணைந்தால் தனது இமேஜ் பாதிக்கும் என்று தனுஷ் அவரை ஓரங்கட்டி வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் இந்த யூகங்கள் அனைத்தையும் உடைத்தெறியும் வகையில், இன்று மலேசியா கோலாலம்பூரில் அனிருத் நடத்தும் இசை நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ள தனுஷ், அனைவரும் அந்நிகழ்ச்சியை கண்டுகளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.