ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தரமான படம் இயக்கியவர்களை புறக்கணிக்கும் சினிமாத்துறை, ஆபாசமான மற்றும் இளையதலைமுறையை தவறாக வழிநடத்தும்வகையில் படம் எடுத்தவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதுதான் ஆச்சர்யம். அங்காடித்தெரு போன்ற அற்புதமான படத்தை இயக்கிய வசந்தபாலன், உள்ளிட்ட பலர் இன்று எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஆனால் ஜி.வி.பிரகாஷ்குமாரை வைத்து 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' என்ற படு ஆபாசமான படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கின்றன.
'யூத்'களுக்காக படம் எடுக்கிறேன் என்ற பெயரில் ஆபாசமான காட்சிகள், வசனங்களை த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் பயன்படுத்தி இருந்தார் ஆதிக் ரவிசந்திரன். வணிக ரீதியில் இந்தப் படம் வெற்றியடைந்ததால் அவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. த்ரிஷா இல்லைனா நயன்தாரா படத்திற்கு பிறகு அவர் சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். அந்தப் படத்திற்குப் பிறகு, ஜீ.வி.பிரகாஷ்குமாரை நாயகனாக வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடிக்கவிருக்கும் படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கவிருக்கிறாராம்.
நல்ல கூட்டணிதான்....!