ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் தொடரில் சின்னத்திரைக்கு வந்தவர் ஸ்ரித்திகா. அதையடுத்து உறவுகள் சங்கமம், வைதேகி, மாமியார் தேவை என சில தொடர்களில் நடித்தவர் இப்போது 'குலதெய்வம்' தொடரில் நடித்து வருகிறார். இப்படி தான் நடித்த எல்லா தொடர்களிலுமே பாசிட்டீவான வேடங்களில் நடித்ததால் குடும்பப் பெண்களின் மனதில் நிலையான இடத்தை பிடித்து விட்டேன் என்கிறார் ஸ்ருத்திகா.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், எல்லோரையும் போலவே எனக்கும் சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது. அதனால் வெண்ணிலா கபடிக்குழு, வேங்கை உள்பட சில படங்களில் நடித்தேன். அதையடுத்து, கிளாமரான கதாநாயகி வேடங்கள் கிடைத்ததால் அப்படி நடிக்க விருப்பமில்லாமல் சின்னத்திரைக்கு வந்து விட்டேன். அந்த வகையில், நாதஸ்வரம் தொடரில் நான் நடித்த மலர் கேரக்டர் எனக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்தது. மலர் மலர் என்று தமிழ்நாட்டு குடும்பப் பெண்களின் உதடுகளால் உச்சரிக்கப்பட்டேன். அனுசரணையாக நடந்து கொள்ளும் பெண்ணின் வேடம் என்பதால் அந்த கேரக்டர் தமிழ்நாட்டு குடும்பப் பெண்களின் மனதில் எனக்கு இடம் பிடித்துக்கொடுத்தது. அதனால் பின்னர் சினிமாவில் எனக்கு ஆர்வம் இல்லாமல் போனது. என்றாலும் நான் எதிர்பார்க்கிற மாதிரி வாய்ப்புகள் வந்தால் சினிமாவிலும் நடிப்பேன்.
மேலும், இப்போது நடித்து வரும் குலதெய்வம் தொடரும் பெண்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. ஆக, டைரக்டர் திருமுருகனின் இரண்டு சீரியல்களுமே எனக்கு சின்னத்திரையில் நிலையான இடத்தை பிடித்துக்கொடுத்து விட்டது. அதனால் அடுத்தபடியாகவும் பாசிட்டிவான வேடங்களில் அதிகமாக நடிக்க ஆசைப்படுகிறேன். குறிப்பாக, புகுந்த வீட்டிற்கு வாழ வரும் பெண்கள் எந்தமாதிரி மற்றவர்களை அணுசரித்து, விட்டுக்கொடுத்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் வேடங்களில் நடிக்க வேண்டும். இந்த மாதிரி வேடங்கள் பெண்களுக்கு அறிவுரையாகவும் இருக்கும். அதோடு, பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வேடங்களில் நடிப்பதிலும் ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறும் ஸ்ரித்திகாவுக்கு, நெகடீவ் வேடங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் உள்ளதாம். ஆனால் அப்படி யாரிடமாவது அவர் சான்ஸ் கேட்டால், அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்டே என்று சொல்லிவிடுகிறார்களாம்.