ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனுஷ்-பிரபுசாலமன் முதன்முறையாக இணைந்துள்ள படம் ரயில் அல்லது மிரட்டு. இதுவரை பிரபுசாலமன் இயக்கிய படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகியிருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க ரயில் பயணத்தின்போது நடக்கிற கதை என்றபோதும், படத்தின் கதையில் நான்கு பாகங்கள் உள்ளதாம். அதாவது சில கேரக்டர்களை ஓப்பன் செய்யும்போது அந்த கேரக்டரைப் பற்றிய ஒரு தொகுப்பு விசுவலில் இடம்பெறுகிறதாம். அந்த காட்சிகளை ரயிலுக்கு வெளியேயும் படமாக்கியிருக்கிறாராம் பிரபுசாலமன்.
மேலும், படம் தொடங்கி முடிகிறது வரை ரயிலில் பயணித்தபோதும், சில முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களை ஓப்பன் செய்யும்போது அவர்களைப்பற்றிய பிளாஷ்பேக் விசயங்களை விசுவல் காட்டுகிறாராம் பிரபுசாலமன். அந்த வகையில், ரயில் படம் நான்கு பாகங்களாக உருவாகியிருக்கிறதாம். இதனால் மொத்த படத்தையும் ரயிலுக்குள்ளேயே வைத்து போரடித்து விடுவார்களோ என்று யாரும் நினைக்க வேண்டாம். சில சுவராஸ்யமான விசயங்கள் ரயிலுக்கு வெளியேயும் படமாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். அதோடு, தனது படங்களில் காட்டுப்பகுதிகளின் இயற்கை வளங்களை அழகுமிளிர படம் பிடித்துக்காட்டும் பிரபுசாலமன், இந்த படத்தில் முந்தைய படங்களை விட இன்னும் அழகியலுடன் படமாக்கியிருக்கிறாராம்.