ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை ஹன்சிகாவுக்கு நடிகை என்பதை தாண்டி இரண்டு வேறு முகங்கள் உண்டு. ஒன்று அவர் 25க்கும் மேற்பட்ட குழந்தைகளை வளர்க்கும் தாய். இன்னொரு முகம் அவர் ஒரு சிறந்த ஓவியர். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே ஓவியப் போட்டிகளில் பரிசு பெற்றிருக்கிறார். இப்போதும் நேரம் கிடைக்கும்போது ஓவியங்கள் வரைந்து வருகிறார். பெரும்பாலும் கடவுள் ஓவியங்களையே அதிகம் வரைவார். அதிலும் கிருஷ்ணன் ஓவியங்களை விதவிதமாக வரைந்து வைத்திருக்கிறார்.
ஹன்சிகாவின் ஓவியங்கள் 10 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகி இருக்கிறது. தற்போது அவர் தான் வரைந்திருக்கும் ஓவியங்களை கொண்ட, கண்காட்சி ஒன்றை சென்னையில் நடத்த திட்டமிட்டிருக்கிறார். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை தன் குழந்தைகள் வளர்ப்பிற்கு செலவிட இருக்கிறார்.
"நான் வரைந்த ஓவியங்களில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து சென்னையில் கண்காட்சி நடத்த திட்டமிட்டிருக்கிறேன். இதுவரை எனக்கு அப்படி ஒரு யோசனை இல்லாமல் இருந்தது. எனது ஓவியங்களைப் பார்த்த நெருக்கமான தோழிகள் இந்த யோசனையைச் சொன்னார்கள். அதனால் நடத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்" என்கிறார் ஹன்சிகா.