ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ரஜினி நடித்த லிங்கா' படத்துக்கு ஏற்பட்ட தோல்வியை விட அதனால் எழுந்த பிரச்னைகள் காரணமாக இனி தமிழ்ப்படமே வேண்டாம் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டார் கே.எஸ்.ரவிக்குமார். அதன் பிறகு சற்றே மீண்ட அவர் தற்போது சுதீப் நடிக்கும் கன்னடப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் 'முடிஞ்சா இவனப் புடி' என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது. சுதீப்புக்கு ஜோடியாக நித்யா மேனன் இப்படதில் நடிக்கிறார்.
'லிங்கா' படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷும், எம்.பி.பாபு இருவரும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ள இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தை வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தெறி' படம் ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இதனால் 'தெறி'க்கு முன்பாக 'முடிஞ்சா இவனைப் புடி' படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கே.எஸ்.ரவிகுமார் விரும்புகிறாராம். எனவே இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை மிக விரைவில் வெளியிடவிருக்கிறார்கள்.