ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டூரிங் டாக்கிஸ் படத்தை அடுத்து டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நாயகனாக நடித்துள்ள படம் நய்யப்புடை. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படத்தை விஜயகிரண் இயக்கியுள்ளார். இதில் எஸ்.ஏ.சியுடன் பா.விஜய், சாந்தினி, நான் கடவுள் ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் சமுதாயத்தில் மன்னிக்க முடியாத தவறு செய்பவர்களை தேடிச்சென்று நய்யப் புடைப்பதுதான் எஸ்.ஏ.சியின் வேலையாம். அதனால் படம் முழுக்க துப்பாக்கியும் கையுமாக நடித்திருக்கும் அவர், ஆக்சன் காட்சியிலும் நடித்துள்ளார்.
இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், நய்யப்புடை படத்தை பிப்ரவரி 19-ந்தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக் குமார், ராஜேஷ்.எம் உள்பட பல திரையுலகினர் நய்யப்புடை படம் பார்த்துள் ளனர். அப்போது படம் நன்றாக இருக்கிறது. ஆனால், 2.05 நிமிடம் இருக்கும் படத்தை இன்னும் 10 நிமிடம் கம்மி பண்ணலாம் என்று கருத்து சொன்ன அவர்கள், முன்னணி நடிகர்களின் படங்கள் வரும்போது படத்தை ரிலீஸ் பண்ண வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்களாம்.
அதனால் இப்போது நய்யப்புடை படத்தின் நீளத்தை குறைக்க முடிவு செய்துள்ள நிலையில், தயாரிப்பாளர் தாணு, எஸ்.ஏ.சி இருவரும் கலந்து பேசி பிப்ரவரியில் படத்தை வெளியிடாமல், மார்ச் 4-ந்தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம். காரணம் அன்றைய தினம் படங்கள் எதுவும் வெளியாகவில்லையாம். ஆக, மார்ச் 4-ந்தேதி சிங்கிளாக நய்யப்புடைக்க வருகிறாராம் எஸ்.ஏ.சந்திரசேகரன்.