சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
நடிகர் விஜய்க்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 3 பேரின் கதையை '3 ரசிகர்கள்' என்ற பெயரில் சினிமாவாக இயக்கி வருகிறார் ஷெபி. இவர் ஏற்கெனவே பிளஸ் 2, டூரிஸ்ட் ஹோம் என்கிற குறும்படங்களை இயக்கியவர். தற்போது 3 ரசிகர்கள் என்ற பெயரில் ஒரு படம் இயக்கி வருகிறார். இது 3 விஜய் ரசிகர்களை பற்றியது.
விஜய்யின் தீவிர ரசிகரான ஹீரோ அவரை நேரில் பார்க்கும் ஆசையில் கிராமத்திலிருந்து புறப்பட்டு சென்னை வருகிறார். சென்னையில் இருக்கும் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து விஜய் வீட்டிற்கு சென்று அவரை பார்க்க திட்டமிடுகிறார். அப்படி பார்க்க செல்கிறபோது மூவரும் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? விஜய்யை சந்தித்தார்களா? என்பது படத்தின் கதை.
இதில் பிரேம் யாஷ், மீரா, என்ற புதுமுகங்களுடன் நிழல்கள்ரவி, சேரன்ராஜ், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடிக்கிறார்கள். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் விஜய்யின் வீட்டை சுற்றிலும், அவரின் வீட்டிலும் எடுக்கப்பட வேண்டியது இருந்ததாம். இதற்காக விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கதையை சொல்லி அவர்களின் அனுமதியுடன் படப்பிடிப்பு நடத்தி உள்ளனர்.