ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஒரு படம் ஓடவில்லை என்றால், அந்தப் படத்தின் திருட்டு விசிடி வெளியாகிவிட்டதாகவும் அதை உடனே தடுக்கும்படி போலீஸ் கமிஷ்னரிடம் புகார் கொடுப்பதுபோல் ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிப்பார்கள். பெரும்பாலும் கார்த்தி நடித்த படங்கள் வெளியாகும்போது இப்படிப்பட்ட ஸ்டண்ட் நடக்கும். கடந்த வாரம் வெளியான இறுதிச்சுற்று படத்தின் திருட்டு டிவிடி வெளியாகி இருப்பதாக இன்று போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் அப்படத்தின் இயக்குநரான சுதா.
இறுதிச்சுற்று படம் இன்றுவரை ஹவுஸ்புல்லாகவே ஓடிக்கொண்டிருக்கிறதாம். ஆனாலும்... திருட்டு டிவிடியை தடுத்துவிட்டால் படம் இன்னும் சில வாரம் ஓடும் என்ற எண்ணத்திலேயே புகார் கொடுத்தாராம் சுதா. இதற்கிடையில், இறுதிசுற்று படத்தைப் பார்த்துவிட்டு அவரது குருநாதரான இயக்குநர் மணிரத்னம் அவரை பாராட்டியுள்ளார். அவரது பாராட்டு என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று என்று சுதா குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய குருநாதர் மணிரத்னம் இறுதிச்சுற்று படத்தை எடிட்டிங்கில் இருந்தபோது பார்த்ததாகவும் குட் என்று சொன்னதாகவும் முன்பு தெரிவித்திருந்தார் இயக்குநர் சுதா.
இந்நிலையில், இறுதிச்சுற்று படத்தை சமீபத்தில் திரையரங்கில் பார்த்தாராம் மணிரத்னம். படம் பார்த்ததும், இயக்குநர் சுதாவை அழைத்து "அற்புதமான படம், குட் ஷோ. உன்னுடைய அடுத்த படத்தை விரைவில் காட்டு" என்று வெகுவாக பாராட்டியிருக்கிறார் மணிரத்னம். மேலும், அவரை தட்டிக் கொடுத்துப் பாராட்டி விரைவில் இன்னும் உயரமான இடத்துக்கு வருவாய் என வாழ்த்தினாராம் மணிரத்னம். அவருடைய பாராட்டால் மிகவும் நெகிழ்ந்துவிட்டதாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குநர் சுதா.