ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் என்ட்ரியான குறுகிய காலத்தில் பிரபலமான இசையமைப்பாளர்களில் சந்தோஷ் நாராயணன், அனிருத் ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் இருவருமே முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர்கள். இதில் அனிருத், வந்த வேகத்திலேயே விஜய், அஜீத் படங்களுக்கு இசையமைத்து முன்னணிக்கு வந்தார். அதேபோல், சந்தோஷ் நாராயணனும் அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும், குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ், இறுதிச்சுற்று என தொடர் ஹிட்களாக கொடுத்து வந்தவர். தற்போது ரஜினியின் கபாலி மற்றும் பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கும் இசையமைக்கிறார். அந்த வகையில், பீப் பாடல் சர்ச்சையில் அனிருத் சிக்கியபோது அவரை ஓவர்டேக் செய்து வேகமாக முன்னேறி விட்டார் சந்தோஷ்நாராயணன்.
மேலும், தற்போது பத்து முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன், இறுதிச்சுற்று படம் மூலம் இந்திக்கு சென்றிருக்கிறார். அவரது இசையை ரசித்த அங்குள்ள ஒரு பிரபல இயக்குனர் சந்தோஷ் நாராயணனைப் பற்றி விசாரித்ததோடு, தொடர்பு கொண்டு பேசியுள்ளாராம். அதனால், கூடிய சீக்கிரமே இந்தி படத்தில் சந்தோஷ் நாராயணன் கமிட்டாகி விடுவதற்கான அறிகுறிகள் அதிகமாக இருப்பதாக கூறுகிறார்கள்.