ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விசாரணை' படத்தைப் பார்த்தவர்கள் அந்த கொடுமைக்கார இன்ஸ்பெக்டரை மறக்கவே முடியாது. அப்படி ஒரு கொடூரமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் அஜய் கோஷ். தெலுங்குப் படங்களில் வில்லனாக நடித்தவரை 'விசாரணை' படத்தின் மூலம் தமிழுக்குக் கொண்டு வந்தார் இயக்குனர் வெற்றிமாறன். தற்போது ராஜமௌலி இயக்கி வரும் பாகுபலி 2' படத்தில் வழிப்பறிக் கொள்ளைக் காரனாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அஜய் கோஷ். கேரளாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டனர், அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.
விசாரணை பட அனுபவத்தைப் பற்றிப் பேசும் போது, ''வில்லன் கதாபாத்திரமாக இருந்தாலும் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டுள்ளனர். முதல் நாள் காட்சியை படத்தின் இயக்குனருடன் பார்த்தேன், தியேட்டரை விட்டு பயந்து கொண்டே தான் வெளியே வந்தேன். ஆனால் அனைவரும் எனது நடிப்பைப் பாராட்டினார்கள். படத்தில் தினேஷை அடிக்கும் காட்சிகளில் நானே கண் கலங்கிப் போய்விட்டேன். அவரை அடிக்க டம்மியான லத்தி தான் பயன்படுத்தப்பட்டது என்றாலும் அதை வேமாகப் பயன்படுத்தியது வருத்தமாகத்தான் இருந்தது என்கிறார்.
தமிழ் சினிமாவில் இருக்கும் வில்லன் பஞ்சத்தை அஜய் கோஷ் தீர்த்து வைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.