ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கே.பாக்யராஜ் இயக்கிய சித்து ப்ளஸ்-2 படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்தவர் சாந்தினி. அதன்பிறகு நகுல் நடித்த நான் ராஜாவாகப்போகிறேன் என்ற படத்தில் நடித்த சாந்தினிக்கு பின்னர் தமிழில் எதிர்பார்த்தபடி படங்கள் இல்லை. அதனால் தெலுங்கு சினிமாவுக்கு சென்று சில படங்களில் நடித்தவர் தற்போது தமிழில் ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறார்.
இதுபற்றி சாந்தினி கூறுகையில், சென்னை பெண்ணான எனக்கு தமிழில் முன்னணி நடிகையாக வேண்டும் என்பதுதான் ஆசை. அதனால் பிரபல இயக்குனர் கே.பாக்யராஜின் இயக்கத்தில் எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்த போது சந்தோசமடைந்தேன். அந்த படம் எதிர்பார்த்தபடி போகவில்லை என்றபோதும், பாக்யராஜின் அறிமுகம் என்கிற பெருமை எனக்கு உள்ளது.
அதோடு, சினிமாவில் உடம்பைக்காட்டி நடிப்பதை விட திறமையைக்காட்டி நடிக்க வேண்டும் என்ற கொள்கையுடன்தான் நான் நடிக்க வந்தேன். அதனால்தான் இப்போதுவரை நான் கிளாமர் விசயத்தில் விட்டுக்கொடுக்காமல் இருக்கிறேன். அதற்காக மாடர்னாக நடிக்க மறுக்கவில்லை. பாடல் காட்சிகளில் மிதமான கிளாமர் காட்டி நடிக்கத்தான் செய்கிறேன். ஆனால் ஒருபோதும் ஓவர் கிளாமர் காட்ட மாட்டேன். மேலும், இப்போதைய ரசிகர்கள் கிளாமராக நடிப்பவர் களை விட நல்ல பர்பாமென்ஸ் நடிகைகளைத்தான் ரசிக்கிறார்கள். அதனால் எனது கவர்ச்சி கொள்கையில் உறுதியாக இருந்து எப்போதும் லிமிட் தாண்டாமல் நடிப்பேன் என்கிறார் சாந்தினி.