விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
தற்போது பேய் கதைகளுக்கு மவுசு குறைந்து பயணக் கதைகள் அதிகமாக வரத் தொடங்கியிருக்கிறது. அந்த பயணக் கதையிலும் பேய் கதை வைத்து வருகிறது 'சவாரி' என்கிற படம். புதுமுகம் பெனிட்டோவுடன் சனம் ஷெட்டி நடிக்கிறார். செழியன் ஒளிப்பதிவு செய்துள்ளார், விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். படம் வெளிவரத் தயாராக இருக்கிறது.
படம் பற்றி இயக்குனர் குகன் சென்னியப்பன் கூறியதாவது: திரில்லர் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு என்றுமே ஆர்வம் இருக்கும். கொலைகாரன் யாரென்று தெரியாமல், இவனாக இருக்குமோ, அவனாக இருக்குமோ என்று ரசிகர்களை யூகிக்க வைப்பதே இயக்குனர்களுக்கு பெரும் சவால். அத்தகைய படங்களில் ஒன்றுதான் சவாரி. ரசிகர்களை நாற்காலியின் நுனியில் உட்கார வைக்கும். இன்றைய காலக் கட்டத்தில் நமக்கு எதிலும் வேகம், எல்லாவற்றிலும் வேகம். படம் பார்க்கும் ரசிகர்கள் கூட வேகமான தட தட என ஓடும் திரைக்கதை உள்ளப் படங்களைத் தான் ரசிக்கின்றனர். அதை பூர்த்தி செய்யும் விதமாக ரோடு த்ரில்லர் பாணியில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. படம் ரசிகர்களை நிச்சயம் நாற்காலியின் நுனியில் உட்கார வைக்குக்கும் என்கிறார் இயக்குனர் குகன் சென்னியப்பன்.
அம்புலி 3டி படத்தில் அறிமுகமான சனம் ஷெட்டி அதன் பிறகு பல படங்களில் நடித்து விட்டார் ஒரு வெற்றிதான் அவருக்கு அமையவில்லை. இந்தப் படத்தில் அது கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.