ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அலைபாயுதே படத்தில் இருந்தே மாதவனை எனக்கு பிடிக்கும். அதனால் அவரது ஒவ்வொரு படங்களையும் பார்த்து விடுவேன் என்கிறார் டைரக்டர் ராஜேஷ்.எம்
மேலும் அவர் கூறுகையில், அவர் நடித்துள்ள இறுதிச்சுற்று படத்தை பார்ப்ப தற்கு முன்பே அம்மா கிரியேசன்ஸ் சிவா எனக்கு போன் செய்தார். அப்போது படத்தை பார்த்த எனக்கு அன்று இரவு முழுக்க தூக்கமே வரவில்லை. அந்த அளவுக்கு ஒரு பீல் உள்ள படம் என்றார். அதையடுத்து நான் தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்தேன். அடுத்து மாதவனுடனும் இறுதிச்சுற்று படத்தை பார்த்தேன். ஆக, இரண்டுமுறை பார்த்து விட்டேன். டைரக்டர் சுதாவின் ஒர்க் பிரமாதமாக உள்ளது. அவர் எனக்கு நல்ல ப்ரண்டு. அவருடன் கதைகளைப்பற்றி நிறைய விவாதித்திருக்கிறேன்.
மேலும், அலைபாயுதே படத்தின் போஸ்டரைப் பார்த்ததுமே மாதவனை எனக்கு பிடித்து விட்டது. அப்போது இந்த பையன் நல்லா இருக்கானே என்று சொல்லியிருக்கிறேன். இப்போது அவரை பார்த்தால் டோட்டலாக வேறு மாதிரி இருக்கிறார். அந்த படத்தில் அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் எனது படங்களிலும் அவர் மாதிரி எக்ஸ்பிரஷன் கொடுக்குமாறு எனது பட ஹீரோக்களிடம் கேட்பேன். ஆனால் அவர்கள், அவர் மாதிரியெல்லாம் நம்மால் நடிக்க முடியாது என்று கூறி விடுவார்கள். அந்த அளவுக்கு வித்தியாசமான பர்பாமென்ஸ் கொடுக்கக்கூடியவர் மாதவன் என்கிறார் டைரக்டர் ராஜேஷ்.எம்