ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஞாபகங்கள், இளைஞன் படத்திற்கு பிறகு 30 ரூபாய் சிடி என்ற படத்தில் நடித்தார் பா.விஜய். அந்த படம் பின்னர் தகடு தகடு என்று பெயர் மாற்றப்பட்டது. ஆனால் இப்போதுவரை ரிலீசாகவில்லை. அதனால் அதையடுத்து ஸ்ட்ராபெர்ரி என்றொரு கதையை ரெடி பண்ணி தானே தயாரித்து இயக்கி நடித்தார் பா.விஜய். ஹாரர் கதையில் உருவான அந்த படம் ஓரளவு வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் நாயகனாக நடித்துள்ள நய்யப்புடை படத்தில் இன்னொரு ஹீரோ போன்ற வேடத்தில் நடித்திருக்கிறார். கதைப்படி நிருபராக அப்படத்தில் நடித்துள்ள பா.விஜய்க்கு அதைத் தொடர்ந்த புதிதாக படங்கள் எதுவும் வரவில்லையாம்.
அதனால், தற்போது மீண்டும் தன்னைத்தானே இயக்கிக்கொள்வதற்காக ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறாராம். ஸ்ட்ராபெர்ரியில் இருந்து மாறுபட்ட கதையில் இந்த படத்தை இயக்கி நடிக்கப்போகும் பா.விஜய், அப் படத்தில் கமர்சியல் விசயங்கள் இருந்தபோதும் சமூகத்துக்கு நல்லதொரு கருத்தும் கலந்து சொல்லப்போகிறாராம். நய்யப்புடை திரைக்கு வந்ததும் அந்த படத்தின் வேலைகள் தொடங்குகிறதாம்.