ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
எந்த காலத்திலும் விளம்பர படத்தில் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக சொல்லி வந்த கமல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பிரபல ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடித்தார். இந்த விளம்பரம் மூலம் வந்த 10 கோடி ரூபாயை ஒரு தொண்டு நிறுவனத்துக்கு அளித்தாக செய்திகள் வெளிவந்தது. அதை அந்த நிறுவனம் மறுத்தது. கடனை அடைக்க நடித்தார் என்ற செய்தி அடுத்து வந்தது. இது எதையும் கமல் மறுக்கவும் இல்லை. ஒத்துக்கொள்ளவும் இல்லை. இப்போது முதன் முறையாக அதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
விளம்பர படத்தில் நடித்த பணம் பலரின் உதவிக்குத்தான் போய்கொண்டிருக்கிறது. கொடுத்ததே தெரியாமல் செய்ய வேண்டும் அதுதான் பெரிய விஷயம். நானும், ஒரு பத்திரிக்கை அதிபரும் இணைந்து ஒரு தொண்டு நிறுவனம் நடத்துகிறோம். அதன் மூலம் பல விஷயங்கள் செய்கிறோம். அதனை யார் செய்வது என்பது தெரியாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். 7 ஆயிரம் எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளை தத்தெடுத்திருக்கிறோம். அவர்கள் இப்போது கல்லூரி செல்லும் வயதுக்கு வந்திருக்கிறார்கள். சிலர் திருமண வயதை எட்டியிருக்கிறார்கள். குடும்பம் பெரிதாகிவிட்டது. அவர்கள் யார் என்பதை போட்டோ போட்டு விளம்பரபடுத்த முடியாது. அதனால் வாங்கிய காசையும் செய்த செலவை மட்டுமே கூறமுடியும்.
இதுவரை என் ரசிகர்கள் 20 கோடிக்கு மேல் தங்கள் சொந்த காசை போட்டு நற்பணி செய்திருக்கிறார்கள். என் பங்கிற்கு நானும் ஏதாவது செய்ய வேண்டாமா? அதற்குத்தான் விளம்பர படத்தில் நடித்தேன். சினிமாவில் சம்பாதித்து செய்வது கடினம். அதனால்தான் விளம்பரத்தில் நடித்து அந்த பணத்தை திருப்பி விட்டேன். கமல் விளம்பர நடிகர் என்ற பெயர் வந்து விடாத அளவிற்கு, தேவைப்பட்டால் இனியும் விளம்பரத்தில் நடிப்பேன் என்கிறார் கமல்.