ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இன்றைய சூழலில் வெளியாகும் படங்கள் ஒருவாரம் தியேட்டரில் இருந்தாலே ஆச்சர்யம். முன்னணி நடிகர்கள் நடித்த பல படங்கள் வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்கள் மட்டுமே அரங்குகள் நிறைகின்றன. திங்கள் கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை தியேட்டர்கள் காலியாக இருப்பதாகவே சொல்கின்றனர் தியேட்டர்காரர்கள். இப்படிப்பட்ட சூழலில் கடந்த வெள்ளிக் கிழமையன்று (29-1-16) வெளியான 'இறுதிச்சுற்று' திரைப்படம் இன்னும் அரங்குநிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த வாரம் பெங்ளூர் நாட்கள் உட்பட சில படங்கள் வெளியாக உள்ளன. அப்படியும் இறுதிச்சுற்று படத்துக்கு பாதிப்பு இல்லை. அதுமட்டுமல்ல, 150 தியேட்டர்களில் வெளியான இறுதிச்சுற்று அடுத்தடுத்த நாட்களில் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு தற்போது 250 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் வாரம் திரையரங்கத்திற்கு 40 சதவிகிதம் ஷேர்தான் கிடைக்கும். இரண்டாவது வாரம் 50 சதவிகிதம் ஷேர் கிடைக்கும். இதை கணக்கில் எடுத்துக் கொண்ட பல தியேட்டர்கள் இந்த வாரம் வெளியாக உள்ள புதுப்படங்களை திரையிட ஆர்வம் காட்டாமல் கடந்த வாரம் வெளியான இறுதிச்சுற்று படத்தையே தொடர்ந்து திரையிட முடிவு செய்துள்ளனவாம். இதனால் தியேட்டர்காரர்களுக்கு கூடுதல் லாபம்.
இறுதிச்சுற்று படத்தின் இயக்குநரான சுதா கோங்கரா தன் படத்துக்குக் கிடைத்த இந்த வரவேற்பு பற்றி பேசும்போது, ''ஹிந்தியில் இப்படம் வெளியாகி இரண்டு நாட்கள் கழித்து தான் ஹிட் என்ற ரிசல்ட்டு கிடைத்தது. ஆனால் தமிழில் முதல் காட்சியிலேயே ஹிட் என்று ரிசல்ட் கிடைத்தது. நல்ல கதையை கொண்ட படங்களை நேசிக்கும் ரசிகர்கள், நல்ல சினிமாவை கொண்டாடும் பத்திரிகையாளர்கள் தந்த வெற்றி இது. இந்த வெற்றிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் தலைவணங்குகிறேன்'' என்கிறார் கண்ணீர் மல்க!