ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிப்ரவரி மாதத்தின் முதல் வெளியீடாக நாளை ஐந்து படங்கள் வெளிவர உள்ளன. “பெங்களூர் நாட்கள், விசாரணை, சாகசம், நாளை முதல் குடிக்க மாட்டேன், இரண்டு மனம் வேண்டும்” ஆகிய ஐந்து படங்கள் நாளை வெளியாகின்றன. இவற்றில் 'பெங்களூர் நாட்கள், விசாரணை' ஆகிய படங்கள் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களாக அமைந்துள்ளன.
மலையாளத்தில் வெளிவந்த 'பெங்களூர் டேய்ஸ்' படம்தான் தமிழில் 'பெங்களூர் நாட்கள்' ஆக வெளிவருகிறது. தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரும் மல்டிஸ்டார் படமாகவும் அமைந்துள்ளது. குடும்பத்து ரசிகர்கள், இளம் ரசிகர்கள் என அனைவரும் ரசிக்கும் விதமாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.
'விசாரணை' படம் தமிழ் சினிமாவின் அடுத்தக் கட்ட முயற்சி என்று பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், மணிரத்னம் என திரையுலகமே இந்தப் படத்தைத் திரண்டு வந்து வாழ்த்திக் கொண்டிருக்கிறது. ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ரசிகர்களிடமும் பாராட்டு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரசாந்த் நடித்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவரும் படம் 'சாகசம்'. தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற 'ஜுலாய்' என்ற படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். 'சாகசம்' படம் தன்னை தமிழ்த் திரையுலகத்தில் மீண்டும் காலூன்ற வைக்கும் என்ற பெரிய எதிர்பார்ப்பில் பிரசாந்த் இருக்கிறார்.
இந்தப் படங்களுடன் சிறு படங்களான 'நாளை முதல் குடிக்க மாட்டேன், இரண்டு மனம் வேண்டும்' ஆகிய படங்களும் வெளிவருகின்றன.