14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
'கயல்' படத்திற்கு பிறகு பிரபுசாலமன் இயக்கும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ரெயில் அல்லது, மிரட்டு என்று பெயர் வைக்கலாம் என்று தெரிகிறது. டில்லியிலிருந்து சென்னை வரும் ரெயிலில் நடக்கும் பயணக்கதை, கீர்த்தி சுரேஷ், தம்பி ராமய்யா கணேஷ் வெங்கட்ராம் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் கதையே கேட்காமலேயே தனுஷ் நடித்துள்ளார்.
இதுகுறித்து பிரபு சாலமான் கூறியிருப்பதாவது: சில கதைகளின் களம் புதுமுகங்களுக்கு ஏற்றதாக இருக்கும். சில கதைகளில் அனுபவம் மிக்கவர்கள் தேவைப்படும். இப்போது நான் இயக்கும் படத்திற்கு கதாப்பாத்திரத்தை தாங்கி, பிரதிபலிக்க அனுபவசாலி தேவைப்பட்டது. அதற்காக தனுஷ் தேவைப்பட்டார். நட்சத்திர அந்தஸ்து உள்ள தனுஷை சந்தித்த நாள் டிசம்பர் 28. கிருஸ்துமஸ் கொண்டாடி விட்டு அவரை சந்தித்தேன் ஒரு படம் செய்யலாமா ? என்றேன் உடனே எப்பனு சொல்லுங்க வர்றேன் என்றார். கதைகூட கேட்காமல் ஜூன் 1 ஆம் தேதி முதல் 60 நாள் ஒரே கட்டமாக தேதி தந்தார்.
ஷூட்டிங் ஆரமித்து பத்து நாட்கள் வரை படத்தின் கதை என்ன என்பதே அவருக்கு தெரியாது அவரது காதாப்பதிரத்தை பற்றி மட்டுமே சொல்லி இருந்தேன் அதற்கு பிறகுதான் முழு கதையையும் சொன்னேன் . அதை உள்வாங்கிக் கொண்டார். ஒரு புதுமுகம் மாதிரி அருமையாக நடித்துக் கொடுத்தார். என்ன எடுக்கிறோம் என்று மானிட்டர் கூட பார்க்க மாட்டார். 80 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் ரயில் மீது உயிரை பணயம் வைத்து ஓடுவது, ஸ்டன்ட் செய்வது என்று தூள் கிளப்பி இருக்கிறார். என்கிறார் பிரபுசாலமன்.