ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் துல்கர்சல்மான் நடித்து செகண்ட் ஷோ, உஸ்தாத் ஹோட்டல் உள்பட அவரது ஆரம்பகால படங்கள் அவருக்கு தொடர்ந்து ஹிட்டாக அமைந்தன. அதனால் அதேவேகத்தில் தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்து இருமொழி நடிகராகி விட வேண்டும் என்று திட்டமிட்டு, வாய்மூடி பேசவும், ஓ காதல் கண்மணி ஆகிய படங்களில் நடித்தார். இதில் ஓ காதல் கண்மணி ஓரளவு வெற்றியாக அமைந்தது. என்றாலும், அடுத்தபடியாக தமிழில் துல்கருக்கு புதிய படங்கள் இல்லை. அதனால், மறுபடியும் தாய்மொழியான மலையாளத்துக்கே திரும்பிய அவர், இப்போது பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதில், அவர் நடித்து கடைசியாக வெளியான சார்லி படம் ஹிட்டாக அமைந்தது. அதனால் துல்கர்சல்மானை வைத்து அடுத்தடுத்து படம் இயக்க டைரக்டர்கள் நீண்ட கியூவில் நிற்கிறார்களாம். இந்த நேரத்தில் சமீபத்தில் ஒரு புதுமுக டைரக்டர் மீண்டும் அவரை தமிழ்ப்படத்தில் நடிக்க கதை சொல்ல முயற்சி எடுத்தாராம். ஆனால், மலையாளத்தில் பிசியாக போய்க்கொண்டிருக்கிறது. அதனால் இந்த நேரத்தில் தமிழுக்கு கவனத்தை திருப்பினால் இங்கே இருக்கிற மார்க்கெட்டுக்கு பிரச்னையாகி விடும். அதனால் இப்போது வேண்டாம் பியூச்சரில் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டாராம் துல்கர்சல்மான்.