ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மாதவன் நடிப்பில் வெளியாகியுள்ள இறுதிச்சுற்று படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது, தயாரிப்பாளர் சங்கத்தலைவர் எஸ்.தாணு மற்றும் பிலிம்சேம்பரின் முக்கிய நிர்வாகிகள் அரங்கிற்குள் வந்தனர். அப்போது, அம்மா கிரியேசன்ஸ் சிவா, இனி தமிழில் வெளியாகும் ஒவ்வொரு நல்ல படங்களுக்கும் அம்மா கிரியேசன்ஸ் அவார்டு வழங்கப்போகிறேன். இந்த இறுதிச்சுற்று படத்தில் இருந்து அது ஆரம்பமாகிறது என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், இறுதிச்சுற்று படம் பார்த்தபோது ரொம்ப சந்தோசப்பட்டேன். இந்த மாதிரி நல்ல படமெடுக்க ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை. அதனால் இந்த நல்ல படத்தை எடுத்துள்ள இறுதிச்சுற்று படக்குழுவுக்கு மரியாதை செய்ய ஆசைப்பட்டேன். அதனால் தயாரிப்பாளர் சங்கம், பிலிம் சேம்பரை சேர்ந்தவர்களை வரவைத்து அவர்கள் கையினால் இவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
அம்மாவின் முதல் முத்தம் போல அம்மா கிரியேசன்ஸ் அவார்ட்ஸ் -என்று இந்த படத்திலிருந்து நல்ல படங்களுக்கெல்லாம் மெடல் கொடுக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. மெடல் கொடுக்க வேண்டும் என்கிற தூண்டுதலை இந்த படம் எனக்கு ஏற்படுத்தியது. அதற்காக டைரக்டர் சுதாவுக்கு நன்றி. நல்ல படத்தை நம்மால் எடுக்க முடியவில்லை என்றாலும் நல்ல படங்களில் எங்கேயாவது ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என்ற சுயநலம்தான் இதற்கு முக்கியமான காரணம்.
மேலும், மாதவன் சினிமா மீது எக்கச்சக்கமான லவ் கொண்டவர். இந்த படம் அவருக்கு சரியான தீனி. ரித்திகா சிங் பிரமாதமான பர்பாமென்ஸ். அவரது உழைப்பை கற்பனையே செய்து பார்க்க முடியவில்லை. அவர் மட்டுமின்றி படத்தில் நடித்துள்ள அனைவருமே சிறப்பாக நடித்திருந்தனர். மறைந்த டைரக்டர் கே.பாலசந்தர் அவர்கள், தமிழ் சினிமாவில் ஒரு பவர்புல்லான கமர்சியல் பெண் டைரக்டர் வரவில்லையே என்று சிலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார். அதை இப்போது சுதா நிறைவேற்றியிருக்கிறார். தமிழில் வெற்றிப்படம் கொடுத்த முதல் பெண் டைரக்டர் இவர்தான் என்றார்.
அதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம், பிலிம்சேம்பர் நிர்வாகிகள் மேடையில் ஏறி, மாதவன், ரித்திகா சிங், டைரக்டர் சுதா உள்பட இறுதிச்சுற்று யூனிட்டின் முக்கிய கலைஞர்கள் அனைவருக்குமே மெடல் அணிவித்தனர். சிலர், இந்த படத்திற்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்றும் வாழ்த்தினர்.