ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா மற்றும் பலர் நடிக்கும் படம் 'போக்கிரி ராஜா'. இப்படத்தை 'தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நண்பர்களான ஜீவா, சிபிராஜ் இருவரும் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். ஆனால், இவர்கள் இருவரும் நண்பர்கள் என்று தெரியாமலேயே சிபிராஜிடம் போய் கதை சொன்னதாகச் சொல்கிறார் படத்தின் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா. படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானது ஜீவாதான்.
ஜீவாவின் முன்னாள் மக்கள் தொடர்பாளரான பி.டி.செல்வகுமார்தான் இப்படத்தின் தயாரிப்பளார். அப்படியிருக்கும் போது அவர்களுடைய ஆலோசனையின் பேரில்தான் ராம்பிரகாஷ் சிபிராஜிடம் கதை சொல்லப் போயிருப்பார். இதை கூட ஓரளவிற்கு நம்பிவிடலாம். ஆனால், படப்பிடிப்பில் சண்டைக் காட்சி ஒன்றில் நடிக்கும் போது இருவருக்கும் 'ஈகோ' மோதல் ஏற்பட்டு பேசிக் கொள்ளவில்லை என்ற ஒரு கதையும் சொன்னார் ராம்பிரகாஷ்.
அதாவது படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிபிராஜ் அடிக்கும் போது நன்றாக உருண்டு போய் விழும்படி ஜீவாவைச் சொல்லியிருக்கிறார் ராம்பிரகாஷ். ஆனால், ஜீவா லேசாகத்தான் உருண்டு போனாராம். நிஜமாக ஒருவர் அடித்தால் என்ன செய்வீர்களோ அதைச் செய்யுங்கள் என்று இயக்குனர் ராம்பிரகாஷ் சொல்ல, சிபியிடம் அடி வாங்கி எழுந்தவர் நேராகச் சென்று பதிலுக்கு சிபியை நன்றாக அடித்துவிட்டாராம்.
சண்டைக் காட்சியில் அப்படி ஒரு மோதலே இல்லையாம், இயக்குனர் சொன்னதைக் கேட்டு கோமடைந்த ஜீவா தானாகவே அப்படிச் செய்துவிட்டாராம். இதனால் கோபமடைந்த சிபிராஜும் அதன் பின் ஜீவாவிடம் பேசிக் கொள்ளவேயில்லையாம். ஆனால், இருவரும் தற்போது கொஞ்சம் சமாதானமாகிவிட்டார்கள் என்கிறார் இயக்குனர் ராம்பிரகாஷ். இந்த சம்பவம் பற்றி சொல்லும் போதே இது படத்தின் பப்ளிசிட்டிக்கான ஒன்று என்பது போல எந்த ரியாக்ஷனும் இல்லாமல் சொல்கிறார் இயக்குனர். பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லணும்னு அவருக்கு இன்னும் தெரியவில்லை.