ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, நடித்துள்ள 'கெத்து' படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்த படம் யூ சான்றிதழ் பெற்றிருந்தபோதும் 'கெத்து' தமிழ் வார்த்தை இல்லை என்று கூறி வரிவிலக்கு மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து உதயநிதி, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்து வரும் நீதிபதி “கெத்து என்ற சொல் தமிழ் இலக்கியமான திருபுகழில் இடம் பெற்றுள்ளது எனவே அரசு இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் வணிகவரித்துறையின் முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பதில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவின் சுருக்கம் வருமாறு: கெத்து படத்தை நீண்ட கால அனுபவம் உள்ள திரைப்படக் கலைஞர்கள் பார்த்து கெத்து தமிழ் வார்த்தை இல்லை என்று கொடுத்த அறிக்கையின் அடிப்படையில்தான் வரிவிலக்கு அளிக்கப்படவில்லை. சென்னை பல்கலைகழம் வெளியிட்டுள்ள தமிழ் அகராதியில் கெத்து என்ற வார்த்தை இடம்பெறவில்லை. திருப்புகழில் கெத்து என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மனுதாரர் கூறியிருக்கிறார். திருப்புகழில் அனுபவம், கிருபை, சைலம் உள்பட 33 பிறமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளது. அதில் ஒன்றுதான் கெத்து.
கெத்து என்பது கன்னட சொல்லாகும். இதற்கு மாறுபட்ட நிழல்படம், சமம் என இரண்டு அர்த்தங்கள் இருக்கிறது. ரஜினி முருகன் என்பது படத்தின் நாயகனின் பெயர், திருட்டு வி.சி.டி என்பதில் திருட்டு என்பது தமிழ் சொல் வி.சி.டி என்பது வினோத், சின்னா, டில்லி என்ற பெயரின் முதல் எழுத்துக்களாகும். இவ்வாறு அந்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கெத்து தமிழ் சொல்தான் என்பதற்கு ஆதாராமாக 4 தமிழ் அகராதியை உதயநிதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்றும் தொடர்ந்து நடக்கிறது.