விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
தமிழ்த் திரையுலகில் ஹாலிவுட்டிலிருந்து கதைகளைக் காப்பியடித்து இங்கு படங்களை எடுக்க ஆரம்பித்தார்கள். அதன் பின் சமீப காலமாக கொரியன் படங்களைக் காப்பியடித்து படங்களை எடுக்க ஆரம்பித்தார்கள். சமயங்களில் மலையாளத்திலிருந்தோ, தெலுங்கிலிருந்தோ கூட கதைகளைக் காப்பியடித்து படங்களை எடுக்க ஆரம்பித்தார்கள். ரீமேக் உரிமை வாங்கி படங்களை எடுக்க ஆரம்பித்தது போக ஒரிஜனல் கதைகளில் இருந்து சில மாற்றங்களைச் செய்து காப்பியடித்தும் பல படங்கள் உருவாகியுள்ளன. அப்படி ஒரு காப்பியாகத்தான் கடந்த வருடம் அஜித் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய 'வேதாளம்' படமும் எடுக்கப்பட்டிருக்கிறது.
2011ல் தெலுங்கில் ஜுனியர் என்டிஆர், தமன்னா மற்றும் பலர் நடிக்க வெளிவந்த படம் 'ஊசரவெல்லி'. இந்தப் படத்தின் கதை இதுதான். பணத்திற்காக எதையும் செய்பவர் ஜுனியர் என்டிஆர். அவர் காஷ்மீர் சென்றிருக்கும் போது தமன்னாவை தீவிரவாதிகள் கடத்த முயல அவர்களிடமிருந்து தமன்னாவைக் காப்பாற்றுகிறார். தமன்னாவைக் காதலிக்கவும் ஆரம்பிக்கிறார் ஜுனியர் என்டிஆர். ஒரு முறை ஜுனியர் என்டிஆர், தமன்னா, பாயல் கோஷ் (மற்றொரு நாயகி) கோயிலுக்குச் சென்றிருக்கும் போது அங்கு ஜுனியர் என்டிஆர் ஒருவரைக் கொலை செய்வதை பாயல் கோஷ் பார்க்கிறார். அதன் பின் பிளாஷ் பேக் வருகிறது. காவல்துறையில் வேலை செய்து வந்த தமன்னாவின் அண்ணன் மற்றும் குடும்பத்தாரை சிலர் கொன்று விடுகிறார்கள். அதிலிருந்து தமன்னா மட்டுமே தப்பிக்கிறார். அவர் தலையில் குண்டு பாய்ந்ததால் அவர் பழைய நினைவுகளை சீக்கிரமே மறந்துவிடுவார் என்கிறார்கள். அதனால், தன் குடும்பத்தாரைக் கொன்றவர்களை ஜுனியர் என்டிஆரை வைத்து பழி வாங்குகிறார். இதுதான் அந்தப் படத்தின் கதை.
அதையே காதலியை தங்கையாக மாற்றி மானே, தேனே போட்டு 'வேதாளம்' படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் சிவா. இப்போது இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்பதுதான் காமெடியின் உச்சகட்டம்.