ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழில் சசி இயக்கிய பூ படத்தில் லீடு ரோலில் நடித்தவர் பார்வதி. அந்த படத்தில் அவர் சிறப்பாக நடித்திருந்தபோதும் அதன்பிறகு உடனடியாக அவருக்கு படவாய்ப்புகள் இல்லை. அதனால் தாய்மொழியான மலையாளத் துக்கு சென்று நடித்துக்கொண்டிருந்த பார்வதியை, தனுஷின் மரியான் படத்துக்காக மீண்டும் தமிழுக்கு கொண்டு வந்தனர். அந்த படத்திலும் பூ படத்தைப்போலவே சிறப்பாக நடித்து கைதட்டல் பெற்றார் பார்வதிமேனன். இருப்பினும், அதன்பிறகு கதாநாயகியாக இல்லாமல் சென்னையில் ஒருநாள், உத்தமவில்லன், பெங்களூர் நாட்கள் போன்ற படங்களில் நடித்தவர், தற்போது சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் -என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு மலையாளத்திலும் சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் தான் நடிக்கும் எந்தவொரு படத்தையும் முன்னணி ஹீரோ, டைரக்டர் படங்கள் என்பதற்காக அவர் ஏற்றுக்கொள்வதில்லையாம்.
இதுபற்றி பார்வதி கூறுகையில், எந்த கதையாக இருந்தாலும் நடிகர்களை மட்டுமே முன்வைத்து கதை பண்ணுவதில் எனக்கு பெரிதாக உடன்பாடில்லை. ஒரு கதை என்றால் அதில் பலதரப்பட்ட கதாபாத்திரங்கள் இருக்கும். அதனால் அந்தந்த கேரக்டர்களுக்கேற்ப முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவள் நான். அதேபோல், படத்துக்குப்படம் நான்தான் லீடு ரோலில் நடிக்க வேண்டும் என்கிற மனநிலையும் எனக்கு இல்லை. சிறிய வேடமாக இருந்தாலும் எனக்கு பிடித்து விட்டால் நடிப்பேன். அந்த கேரக்டரின் காட்சிகளுக்கு என்னால் முடிந்தவரை உயிர் கொடுப்பேன் என்று கூறும் பார்வதி, பெரிய ஹீரோ படம் என்பதற்காக எனக்கு பிடிக்காத வேடங்களில் ஒருபோதும் நான் நடிக்க மாட்டேன். அதன்காரணமாக தேடிவந்த சில படங்களில்கூட நடிக்க மறுத்திருக்கிறேன் என்கிறார்.