ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக கோலேச்சி வரும் நடிகைகளில் த்ரிஷாவும் ஒருவர். தமிழைப்பொறுத்தவரை ரஜினி தவிர அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் டூயட் பாடி விட்டார். தெலுங்கு சினிமாவிலும் அதிக படங்களில் நடித்துள்ள த்ரிஷா இந்தி, கன்னடம், மலையாள படங்களிலும் பரவலாக நடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு தயாரிப்பாளர் வருண்மணியனை திருமணம் செய்து கொள்ளயிருந்தார். ஆனால் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், தொடர்ந்து சினிமாவில் நடிக்க வருண்மணியன் குடும்பத்தினர் த்ரிஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை திருமணம் செய்து கொள்வதை தவிர்த்து விட்டு, சினிமாவில் முழுவீச்சில் இறங்கினார் த்ரிஷா.
அந்த வகையில் கடந்த ஆண்டு மட்டும் என்னை அறிந்தால் தூங்காவனம், சகலகலா வல்லவன், பூலோகம் என பல படங்கள் வெளியான நிலையில், தற்போது அரண்மனை-2 திரைக்கு வந்துள்ளது. இதையடுத்து நாயகி, போகி, கொடி என சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் நாயகி படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார் த்ரிஷா. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள அந்த படத்தை த்ரிஷாவின் மேனேஜர் கிரிதர் தயாரித்திருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. மார்ச் மாதம் படம் திரைக்கு வருகிறது.
இந்த படம் குறித்து த்ரிஷா கூறுகையில், நாயகி எனக்கு முக்கியமான படம். இதற்கு முன்பு நான் நடித்த படங்களில் ஹீரோக்களை சுற்றித்தான் கதை இருந்தது. ஆனால் இந்த படத்தில் என்னை சுற்றி கதை உள்ளது. அந்தவகையில்தான் நான்தான் இந்த படத்தின் ஹீரோ. இந்த படம் ஹாரர் கதையில் உருவாகியிருக்கிறது. இதில் நான் முதன்முறையாக காமெடி காட்சிகளிலும் அதிகமாக நடித்திருக்கிறேன். நான் எதிர்பார்த்ததை விடவும் காமெடி நன்றாக ஒர்க்அவுட்டாகியிருக்கிறது.
மேலும், இந்த நாயகி படத்தில் நான் இரண்டு வேடங்களில் நடித்திருப்பதாக செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் நான் சிங்கிள் ரோலில்தான் நடித்திருக்கிறேன். இந்த படம் மார்ச் மாதம் திரைக்கு வந்த பிறகு என்னை கதையின் நாயகியாக வைத்து படம் பண்ண பல தயாரிப்பாளர்கள் முன்வருவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது என்கிறார் த்ரிஷா.