ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜயசேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கியவர் அருண்குமார். அவர் மீண்டும் விஜயசேதுபதியை வைத்து இயக்கியுள்ள படம் சேதுபதி. முதன்முறையாக இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார் விஜயசேதுபதி. அதற்கு முன்பு காக்கி சட்டை கெட்டப்பில் தன்னை பாத்திராத விஜயசேதுபதி, தனக்கு அந்த ரோல் பொருந்துமா? என்ற சந்தேகத்துடன் ஆடிசனில் கலந்து கொண்டவருக்கு போலீஸ் கெட்டப் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. அந்த வகையில், 50 சதவிகிதம் நம்பிக்கையுடன்தான் இந்த படத்தில் இறங்கினேன். அதேசமயம் டைரக்டர் அருண்குமார் மீது எனக்கு 100 சதவிகிதம் நம்பிக்கை இருந்தது. அதோடு கேமராமேன் தினேஷ் கிருஷ்ணன் 150 சதவிகித நம்பிக்கை கொடுத்தார் என்று அப்படத்தின் ஆடியோ விழாவில் சொன்னார் விஜயசேதுபதி. ஆக, விஜயசேதுபதி 150 சதவிகித நம்பிக்கையுடன் களமிறங்கி நடித்த சேதுபதி படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சேதுபதி படம் குறித்து டைக்டர் அருண்குமாரிடம் கேட்டபோது, படம் அற்புதமாக வந்திருக்கிறது. நாங்கள் ஸ்கிரிப்ட் பண்ணும்போது என்ன நினைத்தோமோ அதை அப்படியே படமாக்கியிருக்கிறோம். விஜயசேதுபதிக்கு இந்த படம் புதுசாக இருக்கும். அதோடு அவரும் புதுசாக தெரிவார். கதை எப்படி புதுமையானதோ அதேபோன்று புதுமையான லொகேசன்களை தேடிப்பிடித்து படமாக்கியிருக்கிறோம். இப்படத்தில் மொத்தம் 6 பைட் சீன்கள் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக அதிரடியாக இருக்கும். அந்த வகையில், சேதுபதி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யக்கூடிய படமாக இருக்கும் என்கிறார் டைரக்டர் அருண்குமார்.