Advertisement

சிறப்புச்செய்திகள்

மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பள்ளி நிலம் விவகாரம் : நேரில் ஆஜராக ரஜினிக்கு ஐகோர்ட் உத்தரவு

29 ஜன, 2016 - 09:29 IST
எழுத்தின் அளவு:
HC-ordered-Rajini-and-his-wife-to-appear-in-court

சென்னை கிண்டியில் நடிகர் ரஜினிகாந்துக்குச் சொந்தமான தி ஆஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் நிலம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வெங்கடேசவரலு என்பவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் அலுவலகத்தில் புகார் செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், வெங்கடேசவரலு புகார் அளித்தார்.

அந்தப் புகார் குறித்து விளக்கம் அளிக்குமாறு, தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இணை இயக்குநர் உத்தரவு ஒன்று பிறப்பித்தார். அதில், தி ஆஸ்ரம் மெட்ரிகுலேசன் பள்ளியை நிர்வகிக்கும், ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கத்தின் செயலர் லதா ரஜினிகாந்த், நிர்வாக அறங்காவலர் ரஜினிகாந்த், ஆஸ்ரம் பள்ளியின் முதல்வர் ஆகியோர் ஜனவரி 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இதனை எதிர்த்து தி ஆஸ்ரம் பள்ளியின் முதல்வர் வந்தனா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன் விசாரணைக்கு வந்தது.


அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சஞ்சய் காந்தி, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இணை இயக்குநர் அனுப்பிய அழைப்பாணைக்கு தடை விதிக்கக் கூடாது. விளக்கம் அளிப்பதற்கு ஏதுவாக, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் ஆஜராகும் விசாரணை தேதியை வேண்டுமானால் மாற்றித் தரலாம் என வாதிட்டார். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பள்ளி முதல்வர் வந்தனா உள்ளிட்டோர் 2 வாரங்களுக்குள் இணை இயக்குநர் முன் ஆஜராகி, தங்கள் பள்ளியின் நிலம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். அதன் பின்னர், 4 வாரங்களுக்குள் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இணை இயக்குநர் சட்டப்படி தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in