சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பீப் சாங் என்ற பெயரில் அனிருத் இசையில் சிம்பு பாடிய ஆபாசப்பாடல் சில வாரங்களுக்கு முன் மிகப்பெரிய சர்ச்சையையும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த ஆபாசப்பாடல் வெளியான சில மணி நேரங்களில், அதை அனிருத் இசையில் நான்தான் பாடினேன் என்று சிம்பு பேட்டியளித்தார். அதுமட்டுமல்ல, இதைப்போல் 150 பாடல்கள் உருவாக்கி வைத்துள்ளோம் என்றும் தெனாவெட்டாக தெரிவித்தார். அதனால் சிம்பு மீது மட்டுமின்றி அனிருத் மீதும் வழக்குகள் போடப்பட்டன.
காவல்நிலையங்களில் புகார்களும் கொடுக்கப்பட்டன. இதனால் சிம்பு அனிருத் இவருக்கும் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது. இடையில் என்ன நடந்ததோ.. அனிருத்துக்கும் இந்த ஆபாசப்பாடலுக்கும் சம்மந்தமில்லை என்று சிம்பு பல்ட்டியடித்தார். அதுவரை சென்னைக்கு வராமல் கனடா லட்ணன் என்று சுற்றிக் கொண்டிருந்த அனிருத், இப்படி சிம்பு அறிவித்த பிறகு தைரியமாக சென்னைக்கு வந்தார்.
அதுமட்டுமல்ல ராத்திரியோடு ராத்திரியாக கோவை சென்று போலீஸ்நிலையத்தில் விளக்கம் கொடுத்துவிட்டு வந்தார். சிம்புவை கலந்து ஆலோசிக்காமல் தன்னை மற்றும் காப்பாற்றிக் கொள்ளும்வகையில் தன்னிச்சையாக போலீஸில் விளக்கம் அளித்ததால் சிம்பு குடும்பத்தினர் அனிருத் மீது செம கடுப்பில் உள்ளனராம். இந்த கடுப்பின் வெளிப்பாடாக, பீப் சாங்குக்கு இசையமைத்தது அனிருத் என்று போலீஸ் விசாரணையின்போது சொல்ல இருப்பதாகவும் தகவல்.