14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
பாலுமகேந்திராவின் உதவியாளராக இருந்த எம்.ஆர்.பாரதி பத்திரிக்கையாளராகவும் பணியாற்றினார். தற்போது அழியாத கோலங்கள் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தில் பாலுமகேந்திராவின் ஆஸ்தான நாயகி அர்ச்சனா, ரேவதி, பிரகாஷ்ராஜ் நடித்துள்ளனர். படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து வெளிவரத் தயாராக இருக்கிறது.
இந்தப் படம் ஒரு பெங்காலி படத்தின் ரீமேக், முறைப்படி உரிமம் பெற்றிருந்தாலும் அந்தப் படத்தின் ஒன் லைனை மட்டும் எடுத்துக் கொண்டு தமிழுக்கு ஏற்ற மாதிரி சில மாறுதல்களைச் செய்து படமாக்கி உள்ளார். இது நடுத்தர வயதினரின் உணர்வுகளை பேசுகிற படம். ஒரு கல்லூரி மாணவன் தன்னுடன் படிக்கும் மாணவியின் அழகில், குணத்தில் ஈர்க்கப்பட்டு அவளுக்கு ஒரு காதல் கடிதம் எழுதுகிறான். அவளோ எனக்கு காதல் கவிதை எழுது ஆனால் அதை எனக்கு அனுப்பாமல் பத்திரிகைகளுக்கு அனுப்பு நீ உயரத்துக்கு போவாய் என்கிறாள். அவனும் அப்படியே செய்ய இலக்கிய உலகில் பெரிய எழுத்தாளனாகிறான். அவனுக்கு ஒரு காதல் தோல்வி வருகிறது. பின்னர் கல்யாணம் குழந்தை என்று செட்டிலாகிறான்.
ஒரு முறை டில்லிக்கு சாகித்த அகாடமி விருது வாங்கச் செல்லும்போது வங்கி வேலைக்கு செல்ல இருந்த என்னை எழுத்தாளனாக்கியது என்னுடன் படித்த ஒரு பெண்தான் என்பதை சொல்கிறார். திடீரென்று ஏனோ அவளை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவளைத் தேடிச் செல்கிறான். 25 வருடங்களுக்கு பிறகு ஒரு மழை இரவில் அவளை சந்திக்கிறான். அந்த ஒரு இரவில் நடக்கும் நிகழ்வுகள்தான் அழியாத கோலங்கள். எழுத்தாளராக பிரகாஷ்ராஜும், அவரை ஊக்குவித்த பெண்ணாக அர்ச்சனாவும், மனைவியாக ரேவதியும் நடித்துள்ளனர்.