ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கதையை நம்புவதைவிட சதையை(கவர்ச்சி)யை நம்புவது மேல் என்று எண்ணி சில வருடங்களுக்கு முன்புவரை இயக்குநர்கள் கதை பண்ணினார்கள். இப்போதும் கூட கதையை நம்புவதைவிட என்பதில் உறுதியாகத்தான் இருக்கிறார்கள். அதோடு கதையை நம்புவதைவிட பேயை நம்பலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களே எப்படியாவது வெற்றிப்படத்தைக் கொடுக்க வேண்டும் என் எண்ணத்தில் சீசன் கதையான பேய்க்கதையில் நடிக்கும்போது மற்ற நடிகர்கள் எம்மாத்திரம்?
காமெடியனாக இருந்த சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் ஹீரோவானார். அதன் பிறகு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், வாலிபராஜா ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். இவற்றில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் ஆகிய இரண்டு படங்களுமே வெற்றியடையவில்லை.
வாலிபராஜா படமோ பல தடவை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தினால் இன்னும் ரிலீஸ் ஆகவே இல்லை. இப்படியான சூழலில் 'தில்லுக்கு துட்டு' என்ற படத்தில் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். சந்தானத்துக்குப் பிடித்தமான காமெடி சப்ஜெக்ட்டாக இருந்தாலும் இது ஹாரர் படமாம். அதனால்தான் தேனாண்டாள் பிலிம்ஸ் இந்தப்படத்தை தயாரிக்க முன்வந்ததாம்.