ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்கிய படம் 'கோச்சடையான்', ரஜினி நடித்த இந்த அனிமேஷன் படத்தை மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. இந்த நிறுவனம் தயாரிப்பு செலவிற்காக ஆட் பீரோ அட்வர்டைசிங் என்ற நிறுவனத்திடம் 10 கோடி ரூபாய் கடன் வாங்கியது. இந்த கடனை திருப்பி செலுத்தும் விதமாக 5 கோடி ரூபாய்க்கான காசோலையை மீடியா ஒன் குளோபல் நிறுவனம் ஆட் பீரோவுக்கு வழங்கியது.
உரிய காலத்தில் வங்கியில் செலுத்தப்பட்ட காசோலை பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதை தொடர்ந்து பலசுற்று பேச்சு வார்த்தை நடந்தும் உரிய தீர்வு எட்டப்படாததால் ஆட் பீரோ நிறுவனம் குளோபல் நிறுவனத்தின் மீது சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கோச்சடையான் தயாரிப்பு நிறுவனத்துக்கு பல முறை சம்மன் அனுப்பியும் யாரும் ஆஜராகவில்லை. இந்த வழக்கின் விசாரணை நேற்றும் கோர்ட்டுக்கு வந்தது. அப்போதும் குளோபல் நிறுவனத்திலிருந்து யாரும் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.