Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'போர்க்களத்தில் ஒரு பூ' வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது! -நடிகை தன்யா

26 ஜன, 2016 - 10:06 IST
எழுத்தின் அளவு:
Dhanya-confident-that-Porkalathil-Oru-poo-will-release-soon

இலங்கை செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் போர்க்களத்தில் ஒரு பூ. இன்னும் இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், வருகிற பிப்ரவரி 4-ந்தேதி இந்த படத்திற்கான தீர்ப்பு வெளியாகயிருக்கிறது. நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். இப்படத்தில் இசைப்பிரியாவின் வேடத்தில் நடித்திருப்பவர் தன்யா. இவர் அந்த படத்தைப்பற்றி கூறுகையில்,


'போர்க்களத்தில் ஒரு பூ' எனது முதல் படம். இலங்கை போர் சப்ஜெக்ட். இதில் இசைப்பிரியா கேரக்டரில் நான் நடித்திருக்கிறேன். இசைப்பிரியாவின் குழந்தை முதல் கல்லூரி காலம், பின்னர் அவர் செய்தி வாசிப்பாளராக ஒரு சேனலில் சேருகிறார். பிரபாகரன் சம்பந்தப்பட்ட செய்திகளை வாசிக்கிறார். இதனால் அவரை பிரபாகரன் மகள் என ராணுவம் பிடித்து செல்கிறது. அதைதான் இந்த படத்தில் கதை பண்ணியிருக்கிறார்கள். பிரபாகரனை காட்டவில்லை. போரில் மக்கள் இறந்து போனதையும், இசைப்பிரியாவின் வாழ்க்கையையும்தான் இந்த படத்தில் காட்டியுள்ளனர். மேலும், இந்த படத்தில் முதல்வர் ஜெயலலிதா ரியலாக பேசுவது போன்ற காட்சி உள்ளது. இலங்கை போரில் இறந்து போனவர்களுக்காக நியாயம் வாங்கித்தருவேன் என்ற அவர் சட்டசபையில் பேசியது இந்த படத்தில் இடம்பெற்றிருக்கிறது.


மற்றபடி இந்த படம் தங்களது பேமிலி சப்ஜெக்ட்டாக இருக்கும். இசைப்பிரியாவின் அம்மா படத்தை வெளியிடக்கூடாது என்கிறார். ஆனால் அவர்களது தங்கைதான் இந்த படத்தை எடுக்க முதலில் அனுமதி கொடுத்தார். இப்போது அவர் எதிர்ப்பு தெரிவிப்பதால் தான் டில்லியில், போர்க்களத்தில் ஒரு பூ படத்திற்கு சென்சார் கிடைக்காமல் உள்ளது. அதுபற்றி விசாரிக்க நீதிபதி இசைப்பிரியாவின் அம்மாவை ஆஜராகும்படி கூறியும் அவர் செல்ல மறுக்கிறார். அப்படி அவர் சென்று அந்த படத்தை பார்த்து விட்டு, எந்த காட்சிகளை நீக்க சொன்னாலும் அதை எடுத்துவிட இயக்குனரும், தயாரிப்பாளரும் தயாராக உள்ளனர். மேலும், அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நானும் நிலவரம் குறித்து அவருக்கு தெளிவுபடுத்த நினைக்கிறேன்.


இந்த படம் ரிலீஸ் ஆனால் பொதுமக்களுக்கு இலங்கையில் நடந்த விசயம் தெரிய வரும். 'போர்க்களத்தில் ஒரு பூ', படத்தில் ஒரு தப்பும் இல்லை. பேமிலியோடு பார்க்கலாம். ஏதோ ஒரு விசயத்துக்காக வெயிட் பண்றாங்க. பணம் போட்டவரும் சீரியசாக இருக்கிறார். டைரக்டர் பேமிலி ஊர் ஊராக சுத்துறாங்க. இந்நிலையில், இந்த படத்தை கனடாவில் வெளியிட யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. அங்கு 15 தியேட்டரில் வெளியிட ஓகே ஆகியிருக்கிறது. அதனால் விரைவில் தமிழகத்திலும் போர்க்களத்தில் ஒரு பூ வெளிவர வேண்டும் என்பதுதான் எனது பிரார்த்தனையாக உள்ளது என்கிறார் தன்யா.


மேலும், போர்க்களத்தில் ஒரு பூ படத்தை அடுத்து பாலாவின் தாரைத்தப் பட்டை படத்தில் வரலட்சுமியுடன் நடன பெண்ணாக நடித்த தன்யா, தற்போது அம்மாஞ்சி, யானைகவுனி போன்ற படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார். சினிமாவில் ஒரு ஹீரோயினாக வேண்டும் என்பதை விட நடிகையாக வேண்டும். பிச்சைக்காரி வேடம் கொடுத்தாலும் நடிக்க வேண்டும். முக்கியமாக, விருது கதைகளில் அதிகமாக நடிக்க வேண்டும் என்பது தான் எனது நோக்கம் என்று கூறும் தன்யா, போர்க்களத்தில் ஒரு பூ படத்தை பார்த்த டைரக்டர் பாரதிராஜா, உள்ளிட்ட சில திரையுலக பிரபலங்கள் படத்தை பார்த்து முடித்ததும் கலங்கிய கண்களுடன் இசைப்பிரியாவாக நடித்த அந்த பெண் எங்கே? என்று என்னை கேட்டுள்ளார்கள். அதோடு, ஆரம்பத்தில் இந்த பெண்ணை ஏன் நடிக்க வைத்தீர்கள் என்று கேட்டவர்கள் கூட இவர்தான் சரியான சாய்ஸ் என்று இப்போது கூறுகின்றனர். இது என் நடிப்புக்கு கிடைத்த பெருமை என்று கருதுகிறேன் என்கிறார் தன்யா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in