விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
திரைப்படத்துறையினருக்கு International Indian Film Academy (IIFA) விருதுகள் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற, 2015- ஆம் ஆண்டுக்கான சிறந்த கலைஞர்களுக்கு ஈஃபா விருது வழங்கும் விழாவில் ராஜமௌலி இயக்கிய 'பகுபலி' திரைப்படத்திற்கு 6 விருதுகள் கிடைத்தன.
தமிழின் சிறந்த படம், சிறந்த இயக்குநர் (ராஜமௌலி), சிறந்த குணச்சித்திர நடிகர் (சத்யராஜ்), சிறந்த குணச்சித்திர நடிகை (ரம்யாகிருஷ்ணன்), சிறந்த பின்னணிப் பாடகர் (ஹரிச்சரண்), சிறந்த பின்னணிப் பாடகி (கீதா) என 'பாகுபலி' படம் ஆறு விருதுகளை அள்ளியது!
'தனி ஒருவன்' படத்தில் நடித்த 'ஜெயம்' ரவிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
'மாயா' படத்தில் சிறப்பாக நடித்த நயன்தாரா சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டார்.
சிறந்த இசை அமைப்பாளராக அனிருத் (மாரி), சிறந்த நகைச்சுவை நடிகையாக கோவை சரளா (காஞ்சனா-2), சிறந்த வில்லன் நடிகராக அர்விந்த் சாமி (தனி ஒருவன்), சிறந்த பாடலாசிரியராக தனுஷ் (மாரி) ஆகியோரும் விருது பெற்றனர்.
கடந்த வருடத்தின் மிகச்சிறந்த படமாக காக்கா முட்டை, குற்றம்கடிதல் போன்ற படங்கள் இருந்தும் அவற்றுக்கு விருது வழங்கப்படவில்லை.
தெலுங்கில் தயாரிக்கப்பட்டு தமிழில் டப் செய்யப்பட்ட பாகுபலி படத்துக்கு தமிழின் சிறந்த படம் உட்பட ஆறு விருதுகள் வழங்கப்பட்டது தமிழ்ப்படத்துறையினரை வருத்தப்பட வைத்துள்ளது.
பாகுபலி படத்தை தெலுங்குப்படமாக கணக்கில் எடுத்து எத்தனை விருதுகள் வேண்டுமானாலும் வழங்கலாம் தப்பில்லை.
பாகுபலி படத்துக்கு தமிழ்ப்படம் என்ற பிரிவில் விருது வழங்கப்பட்டதை ஏற்க முடியாது என்ற கருத்து தமிழ்ப்படத்துறையினர் மத்தியில் நிலவுகிறது.