வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

சுகன் கார்த்திக் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரைக்கு வந்த படம் மூன்றாம் உலகப்போர். சுனில் குமார், அகிலா கிஷோர், வில்சன் ஆகியோர் நடிப்பில் உருவான இப்படம் இந்தியா-சீனா போரை மையப்படுத்திய கதையில் உருவாகியிருக்கிறது. இந்த படத்தை தமிழ்நாட்டில் மட்டும் 90 தியேட்டர்களில் திரையிட்டனர். ஆனால் எதிர்பார்த்ததை விடவும் அதிகப்படியான ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்ததால் இப்போது ஏற்கனவே திரையிட்டதை விட சில தியேட்டர்களில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாம்.
இதுபற்றி அப்படத்தின் இயக்குனர் சுகன்கார்த்திக் கூறுகையில், மூன்றாம் உலகப்போர் படம் திரையிட்டிருக்கும் தியேட்டர்களுக்கு பேமிலி ஆடியன்ஸ் அதிகரித்துள்ளனர். இதுவே பெரிய சந்தோசமாக உள்ளது. அதைப்பார்த்து விட்டு, ஓரிரு காட்சிகள் மட்டுமே திரையிட்டிருந்த சில தியேட்டர் உரிமையாளர்கள் இப்போது அவர்களாகவே மூன்றாம் உலகப்போர் படத்தை கூடுதலான காட்சிகள் திரையிட்டு வருகின்றனர்.
இதையடுத்து, இம்மாதம் 29-ந்தேதி ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல வெளிமாநிலங்களிலும் இப்படத்தை வெளியிடுகிறோம். அதனால் சரியான தியேட்டர்களை கைப்பற்றும் முயற்சிகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்.




