என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
சுகன் கார்த்திக் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரைக்கு வந்த படம் மூன்றாம் உலகப்போர். சுனில் குமார், அகிலா கிஷோர், வில்சன் ஆகியோர் நடிப்பில் உருவான இப்படம் இந்தியா-சீனா போரை மையப்படுத்திய கதையில் உருவாகியிருக்கிறது. இந்த படத்தை தமிழ்நாட்டில் மட்டும் 90 தியேட்டர்களில் திரையிட்டனர். ஆனால் எதிர்பார்த்ததை விடவும் அதிகப்படியான ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்ததால் இப்போது ஏற்கனவே திரையிட்டதை விட சில தியேட்டர்களில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாம்.
இதுபற்றி அப்படத்தின் இயக்குனர் சுகன்கார்த்திக் கூறுகையில், மூன்றாம் உலகப்போர் படம் திரையிட்டிருக்கும் தியேட்டர்களுக்கு பேமிலி ஆடியன்ஸ் அதிகரித்துள்ளனர். இதுவே பெரிய சந்தோசமாக உள்ளது. அதைப்பார்த்து விட்டு, ஓரிரு காட்சிகள் மட்டுமே திரையிட்டிருந்த சில தியேட்டர் உரிமையாளர்கள் இப்போது அவர்களாகவே மூன்றாம் உலகப்போர் படத்தை கூடுதலான காட்சிகள் திரையிட்டு வருகின்றனர்.
இதையடுத்து, இம்மாதம் 29-ந்தேதி ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல வெளிமாநிலங்களிலும் இப்படத்தை வெளியிடுகிறோம். அதனால் சரியான தியேட்டர்களை கைப்பற்றும் முயற்சிகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்.