ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் | சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது | தக் லைப் நடிகருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட பதிவை நீக்கிய இயக்குனர் | இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல் | கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு |
சுகன் கார்த்திக் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரைக்கு வந்த படம் மூன்றாம் உலகப்போர். சுனில் குமார், அகிலா கிஷோர், வில்சன் ஆகியோர் நடிப்பில் உருவான இப்படம் இந்தியா-சீனா போரை மையப்படுத்திய கதையில் உருவாகியிருக்கிறது. இந்த படத்தை தமிழ்நாட்டில் மட்டும் 90 தியேட்டர்களில் திரையிட்டனர். ஆனால் எதிர்பார்த்ததை விடவும் அதிகப்படியான ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்ததால் இப்போது ஏற்கனவே திரையிட்டதை விட சில தியேட்டர்களில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாம்.
இதுபற்றி அப்படத்தின் இயக்குனர் சுகன்கார்த்திக் கூறுகையில், மூன்றாம் உலகப்போர் படம் திரையிட்டிருக்கும் தியேட்டர்களுக்கு பேமிலி ஆடியன்ஸ் அதிகரித்துள்ளனர். இதுவே பெரிய சந்தோசமாக உள்ளது. அதைப்பார்த்து விட்டு, ஓரிரு காட்சிகள் மட்டுமே திரையிட்டிருந்த சில தியேட்டர் உரிமையாளர்கள் இப்போது அவர்களாகவே மூன்றாம் உலகப்போர் படத்தை கூடுதலான காட்சிகள் திரையிட்டு வருகின்றனர்.
இதையடுத்து, இம்மாதம் 29-ந்தேதி ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல வெளிமாநிலங்களிலும் இப்படத்தை வெளியிடுகிறோம். அதனால் சரியான தியேட்டர்களை கைப்பற்றும் முயற்சிகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்.