பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், உருவாக்கப்பட்டுள்ள, வியத்தகு இந்தியா பிரசார திட்டத்தின் விளம்பரத் துாதர்களாக, பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், 72, நடிகை பிரியங்கா சோப்ரா, 33, நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சுற்றுலா பயணிகளை கவருவதற்காக, வியத்தகு இந்தியா என்ற பிரசார திட்டத்தை, 2002ல், மத்திய அரசு துவக்கியது. இந்த பிரசார திட்டத்தின் விளம்பர தூதராக, பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான், இடம் பெற்றிருந்தார்.
குழந்தைகள் பாதுகாப்பு, மதசகிப்புதன்மை குறித்த விவாதம் சமீபத்தில் நடந்தபோது, இந்தியாவில் வசிப்பதற்கே, என்னுடைய மனைவி பயப்படுகிறார். குழந்தைகளின் பாதுகாப்புக்காக, வெளிநாடு சென்று விடலாமா என்று கேட்கிறார் என, கருத்து தெரிவித்திருந்தார்; இது, சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வியத்தகு இந்தியா திட்டத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டிருந்த, அமீர் கானுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. விளம்பர தூதராக அமீர் கான் தொடருவாரா என்ற விவாதம் எழுந்தது.
விவாதத்துக்கு முற்றுப்புள்ளி: இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த பிரசார திட்டத்தின் புதிய விளம்பர தூதர்களாக, பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனும், நடிகை பிரியங்கா சோப்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.