ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இந்தியத் திரையுலகில் உள்ள திரைப்பட நடிகர்களை வைத்து மொழி வாரியாக உருவாக்கப்பட்ட நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் ஆரம்பித்து நடக்கும். இதில் தமிழ் நடிகர்கள் உள்ள சென்னை கிரிக்கெட் அணியில் விஷால் கேப்டனாக இருந்து செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு ஜீவா சென்னை அணியின் கேப்டனாக நியிமிக்கப்பட்டார். கடந்த வருடப் போட்டியில் சென்னை அணி இறுதிப்பேட்டியில் தெலுங்கு அணியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தது.
இந்த ஆண்டும் சென்னை அணிக்கு ஜீவாதான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், ஜீவாவை கேப்டனாக நியமிப்பதற்கு சென்னை அணியின் வீரர்களான விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தாகக் கூறப்படுகிறது. அவரைக் கேப்டனாக நியிமத்தால் தாங்கள் அணியை விட்டு விலகுவோம் என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து, வேறு வழியில்லாமல் ஜீவா, தாமாகவே முன் வந்து கேப்டன் பதவியிலிருந்து விலகிவிட்டார்.
இதையடுத்து அணியின் புதிய கேப்டனாக ஆர்யா நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜீவா தொடர்ந்து அணியில் இடம் பெற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அவர் கை வசம் தற்போது ஐந்தாறு படங்கள் உள்ளன. 'கவலை வேண்டாம்' படத்தின் படப்பிடிப்பும் கடந்த வாரம்தான் ஆரம்பமானது. அடுத்து 'ஜெமினி கணேசன்' படத்திலும் அவர் நடிக்க உள்ளார். எனவே தொடர் படப்பிடிப்புகளினால் அவர் அணியில் இடம் பெற மாட்டார் என்றே சொல்கிறார்கள்.
மிகவும் பரபரப்பாக உருவான நட்சத்திர கிரிக்கெட் போட்டி இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தேய ஆரம்பித்துவிட்டது.