ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கோ, யாமிருக்க பயமே படங்களை தயாரித்த ஆர்.எஸ் இன்போடெயின்மெண்ட் எல்ரெட் குமார், அடுத்து தயாரிக்கும் 'கவலை வேண்டாம்' படத்தின் படப்பிடிப்புகள் குன்னூரில் துவங்கியது. படத்தின் ஹீரோ ஜீவா, ஹீரோயின் காஜல் அகர்வால் நடித்த பாடல் காட்சி படமாக்கப்ட்டது.
கவலை வேண்டாம் படத்தில் பாபி சிம்ஹா இன்னொரு நாயகனாக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். ஸ்ருதி ராமகிருஷ்ணன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். லியோன் ஜேம்ஸ் இசை அமைக்கிறார். கே.வி.ஆனந்த் உதவியாளர் அபிநாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
காதல், நட்பு, செண்டிமெண்ட் கலந்த கலவையாக படம் உருவாக இருக்கிறது. முதல்கட்ட படப்பிடிப்புகள் குன்னூரில் நடக்கிறது. 2வது கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடக்கிறது. கவலை இல்லாத மனிதர்கள் இல்லை. ஆனால் அந்த கவலையிலேயே மூழ்கி விட்டால் வாழ்க்கை இல்லை. கவலை வரும் அதை மறக்கவும், தாண்டவும் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற மெசேஜை இரண்டு காதல்களையும், நட்பையும் வைத்து கதை சொல்ல இருக்கிறார் டீகே. யாமிருக்கே பயமேவில் பயமுறுத்தியவர், இதல் உணர்வுகளை பேச வருகிறார்.