ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் இந்தியாவை விட வெளிநாடுகளில்தான் அதிமாக இசை நிகழ்ச்சி நடத்துவார். 2016ம் ஆண்டு முழுவதையும் இந்தியாவில் செலவிடப்போகிறேன் என்ற அவர் அறிவித்துள்ளார். அதன் முதல் கட்டமாக சென்னை. மதுரை மற்றும் கோவையில் நெஞ்சே எழு என்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு நிதி திரட்டுவதற்காக இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை மாலை 6 மணிக்கு நெஞ்சே எழு இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ரகுமானின் திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாது, ஆல்பங்களில் உள்ள பாடல்களும் இடம்பெறுகிறது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஹரிச்சரன், ஹரிகரன், கார்த்திக், பென்னி தயாள், ஸ்வேதா மோகன், சாஷா ஜனிதா, பிளேஸ் உள்ளிட்ட ஏராளமான பாடகர், பாடகிகள் கலந்து கொண்டு பாடுகிறார்கள்.