மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
சமூக சேவை என்பது ஹன்சிகாவின் கூடவே பிறந்தது என்று சொல்லலாம். அதனால்தான் சினிமாவில் தான் ஓரளவு சம்பாதிக்கத் தொடங்கியதுமே தனது சொந்த ஊரான மும்பையில் ஏழை பிள்ளைகள் படிப்பதற்கு உதவி செய்யத் தொடங்கினார். அதையடுத்து கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்து வருகிறார். ஆக, ஹன்சிகாவின் உதவும் மனசு நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே வருகிறது.
அந்த வகையில், தற்போது அவர் ஜீவாவுடன் நடித்து வரும் போக்கிரி ராஜா படப்பிடிப்பில் ஒருநாள் ஜீவாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அப்போது யூனிட்டைச்சேர்ந்த சுமார் 200 பேருக்கு பிரியாணி விருந்து கொடுத்தார் ஜீவா. ஆனால் ஹன்சிகாவோ, மழை வெள்ளத்தால் சேரும் சகதியுமான சென்னை மாநகரை சுத்தம் செய்த துப்புரவு தொழிலாளர்களுக்கு தனது கையால் உதவி செய்ய நினைத்திருக்கிறார்.
அதையடுத்து அவர் சொன்னதுபோலவே 100க்கும் அதிகமான மாநகராட்சி துப்புரவு பணியாளர்களை அழைத்து வந்ததை அடுத்து, அவர்களிடம் சிறிது நேரம் அன்பாக பேசிக்கொண்டிருந்த ஹன்சிகா, பின்னர் தனது கையால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் 10 கிலோ வீதம் அரிசி வழங்கியிருக்கிறார். அதை சிலர் போட்டோ எடுத்தபோது, அதை தடுத்து விட்ட ஹன்சிகா, உதவி செய்வதை பப்ளிசிட்டி செய்வது எனக்கு பிடிக்காது என்று கூறி விட்டாராம்.