ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகைகளில் பலர் கிளிப்பிள்ளைதான். டைரக்டர் சொல்லிக் கொடுப்பதை அப்படியே நடித்துவிட்டு போய்க் கொண்டேயிருப்பார்கள். பூ, மரியான் ஆகிய படங்களில் நடித்த பார்வதி இந்த ரகம் இல்லை. அவர் நடிக்க வந்து 10 ஆண்டுகளாகின்றன. இந்த 10 ஆண்டுகளில் அவர் நடித்த படங்கள் வெகு சொற்பம் தான். படத்தின் கதை, தான் ஏற்கும் கதாபாத்திரம் பிடித்தால் மட்டுமே அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறார் பார்வதி மேனன்.
தனக்கு உடன்பாடு இல்லாத கதையில், கதாபாத்திரத்தில் எத்தனை பெரிய சம்பளம் கொடுத்தாலும் நடிக்க மாட்டார். நடிப்பில் இப்படி ஏகப்பட்ட கொள்கை வைத்துள்ள பார்வதியை மீடியாக்கள் பார்வதி மேனன் என்று எழுதி வருகின்றன. தன் பெயரில் ஜாதியை சேர்த்து எழுதுவதில் அவருக்கு உடன்பாடு இல்லை. என்னுடைய பாஸ்போர்ட் உட்பட அனைத்து ஆவணங்களிலும் பார்வதி என்றே உள்ளது. எனவே யாரும் என்னை பார்வதி மேனன் என்று அழைக்காதீர்கள் என தன்னுடைய ஜாதி எதிர்ப்பை பகிரங்கமாகவே தெரிவிக்கிறார் பார்வதி.