சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
2002-ல் விஜய் நடித்த தமிழன் படத்தில் நாயகியாக நடித்தவர் பிரியங்கா சோப்ரா. அதே படத்தில் உள்ளத்தை கிள்ளாதே என்ற பாடலையும் சொந்த குரலில் பாடினார் பிரியங்கா. அதன்பிறகு முழுநேர இந்தி நடிகையாகி விட்ட அவர், தற்போது குவாண்டிகோ என்ற அமெரிக்க டிவி சீரியலில் அலெக்ஸ் பாரிஸ் என்ற லீடு ரோலில் நடித்து வருகிறார். இந்த சீரியலின் முதல் சீசன் தற்போது நிறைவடைந்துள்ளது. அடுத்த சீசன் விரைவில் தொடங்குகிறது. அதில் அதிகமான திருப்பங்களுடன் கதையோட்டம் விறுவிறுப்பாக செல்கிறதாம். அதற்காக தற்போது தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.
மேலும், இந்த குவாண்டிகா சீரியல் ஜெர்மன், இத்தாலி, ஸ்பானிஷ் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பேசப்படும் பல்வேறு மொழிகளிலும் டப் செய்யப்பட உள்ளதாம். அந்த வகையில், 100 உலக நாடுகளில் 45 மொழிகளில் பிரியங்கா சோப்ராவின் சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாம். இதன்காரணமாக, சினிமாவில் 13 ஆண்டுகளில் 50 படங்களில் நடித்து கிடைத்ததை விடவும் இந்த ஒரே சீரியல் தன்னை உலகமெங்கிலும் பிரபலமாகி விட்ட அதீத மகிழ்ச்சியில் இருக்கிறாராம் பிரியங்காசோப்ரா.